செய்திகள் :

`கணவனுக்கு கவுன்டிங் குறைவு' - வாரிசுக்காக பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த குடும்பத்தினர்

post image

குஜராத் மாநிலம் வதோதரா அருகே வசிக்கும் ரஞ்சன் (பெயர் மாற்றம்) என்பவர் மகனுக்கு திருமணமான நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் சிகிச்சை எடுத்து வந்தனர்.

தற்போது ரஞ்சன் மீது, அவரது 40 வயது மருமகள் போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புகாரில், ''கடந்த ஆண்டு எனக்கு திருமணமாகி கணவர் வீட்டிற்கு சென்றேன். சில மாதங்களில் எனது மாமனார் மற்றும் மாமியார் என்னிடம் உனக்கு வயதாகிவிட்டதால் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்றும், அதனால் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர். ஆனால் எனது கணவரின் விந்துவை சோதனை செய்து பார்த்ததில் அதில் கவுன்டிங் குறைவாக இருந்தது.

எனவே அவரால் எனக்கு குழந்தை கொடுக்க முடியாது என்ற ஒரு நிலை ஏற்பட்டது. செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நடந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. எனவே, மேற்கொண்டு சிகிச்சை வேண்டாம் என்றும், குழந்தை ஒன்றை தத்து எடுத்துக்கொள்ளலாம் என்றும் நான் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நான் எனது அறையில் உறங்கிக்கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த எனது மாமனார் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். அதனை எதிர்த்து சத்தம் போட்டதற்கு என்னை அடித்துவிட்டார்.

இது குறித்து எனது கணவரிடம் காலையில் தெரிவித்தபோது, எனக்கு குழந்தை வேண்டும், எனவே அமைதியாக இரு என்று கூறி என்னை அமைதிபடுத்தினார்.

அப்படி எதாவது புகார் செய்ய நினைத்தால் எனது ஆபாச படங்களை வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டினார். அதனை தொடர்ந்து பல முறை எனது மாமனார் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். ஆனால் குழந்தை உண்டாகவில்லை. இதையடுத்து எனது கணவர் சகோதரியின் கணவர் திடீரென ஒரு நாள் எனது அறைக்குள் வந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். அதன் பிறகு அவர் அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததில் நான் கர்ப்பமானேன். ஆனால் எனக்கு கருத்சிதைவு ஏற்பட்டு விட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: `அரை நிர்வாண நடனத்துடன் ஹெராயினும் புழங்குகிறது’ - சாடும் திமுக

புதுச்சேரி ரெஸ்டோ பார் ஊழியரால் தமிழகத்தைச் சேர்நத கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம், கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளிய... மேலும் பார்க்க

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: 'கல்லூரி மாணவரைக் கொலை செய்தது ஏன்?’ - ஊழியர்கள் வாக்குமூலம்

சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த ஷாஜன் என்பவர், தன்னுடைய பிறந்த நாளை புதுச்சேரியில் மது விருந்துடன் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார். அதற்கான தன்னு... மேலும் பார்க்க

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: "பவுன்சர்கள் வைத்துக் கொள்ள அனுமதித்தது ஏன்?" - கோ.சுகுமாறன்

நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு புதுச்சேரிக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர், கடந்த 9-ம் தேதி ரெஸ்டோ பார் ஊழியர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்க... மேலும் பார்க்க

கூடலூர்: தொடர் கால்நடை வேட்டை; போக்கு காட்டும் புலி; கும்கிகளைக் களமிறக்கிய வனத்துறை; பின்னணி என்ன?

நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தேவர் சோலை சுற்றுவட்டாரக் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக புலி நடமாட்டம் இருப்பதை மக்கள் பார்த்து வருகின்றனர்.தேயிலைத் தோட்டங்களில்... மேலும் பார்க்க

பெங்களூரு: குடும்பத்திற்குள் குறுக்கிட்ட மாமியார்; கொன்று 19 துண்டுகளாக வெட்டி வீசிய டாக்டர் மருமகன்

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள தும்குரு மாவட்டத்தில் உள்ள சிம்புகனஹள்ளி என்ற கிராமத்தில் நாய் ஒன்று மனித கை ஒன்றை வாயில் கவ்வியபடி தெருவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இதைக் கவனித்த பொதும... மேலும் பார்க்க

பழனி: மகளுக்கு திருமணம் நடக்காததால் விரக்தி; மகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை; என்ன நடந்தது?

பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியைச் சேர்ந்தவர்கள் பழனியப்பன் - விஜயா தம்பதி. கட்டித் தொழிலாளர்களான இவர்களுக்கு கார்த்திகா, தனலட்சுமி என்ற 2 மகள்களும், நல்லசாமி என்ற மகனும் உள்ளனர். கார்த்திகா, நல்லசாமிக்... மேலும் பார்க்க