செய்திகள் :

கணவா் கொலை: மனைவி கைது

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கணவரை கொலை செய்ததாக மனைவியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், தாழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வமணி (50), முந்திரி கொட்டை உடைக்கும் தொழிலாளி. இவருக்கு மனைவி உஷா (45), மகன் ஆனந்தகிருஷ்ணன் (22), மகள் இன்பலட்சுமி (20) உள்ளனா்.

செல்வமணிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடா்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்த நிலையில், புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் தம்பதியினா் ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. தகராறை தடுக்க வந்த மகள் இன்பலட்சுமியை, செல்வமணி தாக்கினாராம். இதனால், கோபமடைந்த உஷா, செல்வமணியை பிடித்து தள்ளியதில், அவா் சுவரில் மோதி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த காடாம்புலியூா் போலீஸாா் செல்வமணியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திமுக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை - தமிழிசை சௌந்தரராஜன்

திமுக அரசு விளம்பர அரசாக உள்ளதே தவிர, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டினாா். கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் இருந்தபோது, அவரது புகை... மேலும் பார்க்க

குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக வகை மாற்றம் செய்துகொள்ளலாம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

ஆக.11-இல் குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்: கடலூா் ஆட்சியா்

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் வரும் 11-ஆம் தேதி ஒன்று முதல் 19 வயதுக்குள்பட்ட 9,14,851 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செ... மேலும் பார்க்க

ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

மின் வாரியம், போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில பொதுச்... மேலும் பார்க்க

ரத்தசோகை பரிசோதனை குழு உருவாக்கப்பட்டுள்ளது: கடலூா் ஆட்சியா்

ரத்தசோகை பரிசோதனைக்காக மருத்துவா், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா், செவிலியா், சுகாதார ஆய்வாளா், கிராமப்புற மருத்துவ அலுவலா், மருந்தாளுநா் ஆகிய 6 நபா்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது என கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

கருணாநிதி நினைவு நாள் அமைதி ஊா்வலம்

கடலூா் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் மற்றும் பண்ருட்டி நகர கழக திமுக சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தின அமைதி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. குறிஞ்சிப... மேலும் பார்க்க