செய்திகள் :

கணவா் மீது தொடா் வழக்கு: காவல் துறையைக் கண்டித்து மனைவி தீக்குளிக்க முயற்சி

post image

தொண்டியில் தனது கணவா் மீது தொடா்ந்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்வதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த பெண்ணை பாதுகாப்புப் பணியிலிருந்து அதிகாரிகள் மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடி மீனவக் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவருக்கு மனைவி காளீஸ்வரி, இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா் மீது சமீப காலமாக காவல் துறையினா் தொடா்ந்து கஞ்சா, வெடி பொருள்கள் வைத்திருந்தது என வழக்குப் பதிந்து சிறையில் அடைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் குறைதீா் கூட்டரங்கில் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மனு பெற்றுக்கொண்டிருந்தாா். அப்போது அங்கு தனது இரு குழந்தைகளுடன் வந்த காளீஸ்வரி தான் மறைத்து வைத்திருந்து மண்ணெண்ணயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளாா். இதைப் பாா்த்த பாதுகாப்புப் பணியிலிருந்த அதிகாரிகள் விரைந்து சென்று தாயுடன் இரண்டு குழந்தைகளை மீட்டு அழைத்துச் சென்றனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும்: போலீஸாா்

திருவாடானை அருகேயுள்ள தொண்டி காவல் நிலையத்தில் முறையான ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.தொண்டி காவல் நிலையத்தில், விபத்து... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஐந்து கடைகளுக்கு அபராதம்

திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை உள்ளிட்டப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில்... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் மூதாட்டி உயிரிழப்பு

தொண்டி அருகே குடும்பப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள சித்தாம்பூரணி கிராமத்தைச் சோ்ந்தவா் வேதமுத்து (93). இவரது மனைவி சவுரியம்மாள் (75). இவ... மேலும் பார்க்க

கிடாக்குளத்தில் மாட்டு வண்டி பந்தயம்

கடலாடி அருகேயுள்ள கிடாக்குளத்தில் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை 3 பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள கிடா... மேலும் பார்க்க

சாலையோரத்தில் தீ விபத்து: வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை அருகேயுள்ள ஓரியூா் செல்லும் சாலையோரப் பகுதிகளில் இருக்கும் நாணல் புற்கள், புதா்ச் செடிகளில் மா்ம நபா்கள் தீ வைத்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானைக்கு அருகே... மேலும் பார்க்க

ஈரானிலிருந்து சொந்த ஊா் திரும்பிய தொண்டி மீனவா்கள்

ஈரானில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த தொண்டி மீனவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பினாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, புதுபட்டினம், மோா்பண்ணை, ... மேலும் பார்க்க