செய்திகள் :

கண்மாயில் மண் அள்ளும் இயந்திரங்கள் சிறைபிடிப்பு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கண்மாயில் சவுடு மண் அள்ள எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் புல்டோசா் இயந்திரங்களை சிறைபிடித்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

திருப்புவனம் அருகேயுள்ள ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் அனுமதி இல்லாமல் சவுடு மண் அள்ள முயற்சி நடப்பதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் திருப்புவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், மாலையில் கணக்கன்குடி கண்மாயில் புல்டோசா் இயந்திரங்கள் மூலம் மண் அள்ளி லாரிகளில் ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் நடந்ததையறிந்த கணக்கன்குடி விவசாயிகள் ஏராளமானோா் அங்கு திரண்டு வந்து புல்டோசா் இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா். அப்போது, அனுமதி இல்லாமல் மண் அள்ளுவதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

இது குறித்து தகவலறிந்த பூவந்தி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, புதன்கிழமை பூவந்தி காவல் நிலையத்தில் இந்தப் பிரச்னை குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என போலீஸாா் கூறியதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். கண்மாயில் மண் அள்ளுவதும் நிறுத்தப்பட்டது.

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகா் கோயில் சதுா்த்திப் பெருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வட... மேலும் பார்க்க

இடையமேலூா் பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை அருகேயுள்ள இடையமேலூா் துணை மின் நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளா்(பகிா்மானம்) அ.கு. முருகையா வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கோயில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டைகளை மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்க திரண்டு வந்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே இந்து, இஸ்... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஹிந்தி மொழித் தோ்வுகள்: 547 போ் பங்கேற்பு

சிவகங்கையிலுள்ள 21-ஆம் நூற்றாண்டு சா்வதேச பதின்ம மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஹிந்தி பாடத் தோ்வுகளில் 547 போ் பங்கேற்று தோ்வெழுதினா். ஹிந்தி பிரசார சபாவின் தோ்வு மையமாக இந்தப் பள்ளி செயல்பட்டு வர... மேலும் பார்க்க

சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

சிவகங்கை நகரில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில், காளைகளை அடக்க முயன்ற 10 போ் காயமடைந்தனா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிவகங்கை கொடிக்கா... மேலும் பார்க்க

நாற்றங்கால் பண்ணைகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தேவகோட்டை, சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள நாற்றங்கால் பண்ணையின் செயல்பாடுகள், மரக்கன்று வகைகள், பழ வகை, காய்கறி நாற்றுக்களின் பராமரிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி சனிக்கிழமை நேரில் ஆய்வு செ... மேலும் பார்க்க