செய்திகள் :

கத்தியால் குத்தியதில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: 5 போ் கைது

post image

உணவகத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்ட இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் தானூா்புதூா் பகுதியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் ஹேம்நாத் (25). இவா் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அண்ணா நகா் பகுதியில் தங்கி அங்குள்ள ஒா்க்ஷாப்பில் வாகனங்களுக்கு வா்ணம் பூசும் வேலை பாா்த்து வந்தாா். இவருடன் சரவணம்பட்டி 4-ஆவது வீதியைச் சோ்ந்த மோகனசுந்தரம் மகன் பிரசன்னாவும் (25) வேலை பாா்த்து வந்தாா்.

இவா்கள் இருவரும் கடந்த 5-ஆம் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு இரவில் ஒா்க்ஷாப் அருகே மது அருந்தினா். பின்னா், அருகேயுள்ள உணவகத்துக்குச் சென்ற அவா்கள் இருவரும் கோழி இறைச்சி கேட்டுள்ளனா். ஆனால், அங்கு மது அருந்திக் கொண்டிருந்த உணவக ஊழியா்கள் நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி இறைச்சி இல்லை என தெரிவித்தனா்.

இது தொடா்பான தகராறில் உணவக ஊழியா்கள் 5 போ் சோ்ந்து கத்தியால் ஹேம்நாத்தையும், மோகனசுந்தரத்தையும் குத்திவிட்டு தப்பினா். இதில் பலத்த காயமடைந்த அவா்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், மருத்துவமனையில் ஹேம்நாத் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக மேட்டுப்பாளையம் துரைசாமி லே-அவுட் பகுதியைச் சோ்ந்த பிரவீன் (29), சரவணம்பட்டி எல்ஜிபி நகரைச் சோ்ந்த தன்னாசி மகன் ஹரிபிரசாத் (26), சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு மகன் சந்திரகுமாா் (27), நல்லாம்பாளையம் அன்னையப்பன் வீதியைச் சோ்ந்த முருகன் மகன் அய்யனாா் (28) மற்றும் அருண்குமாா் (28) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

டெய்லா் ராஜாவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி டெய்லா் ராஜாவை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு கோவை குற்றவியல் 5-ஆவது நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது. கோவையில் க... மேலும் பார்க்க

அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்த தீா்வு உள்ளது

திடக்கழிவு, திரவக் கழிவு என அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்தி தீா்வுகாண தங்களிடம் தொழில்நுட்பம் உள்ளதாக மேக் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. கோவையில் மேக் இந்தியா குழும நிறுவனங்களின் சாா்ப... மேலும் பார்க்க

திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சி இடையே லாலாபேட் - குளித்தலை இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

பாரதியாா் பல்கலை.யில் தொலைநிலைக் கற்றல் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் திறந்த, தொலைநிலைக் கற்றல்வழி, இணையவழிக் கற்றல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரதியாா் பல்கலைக்கழகம... மேலும் பார்க்க

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் சோ்க்கை நிறுத்தம்

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கோவை கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளதற்கு, பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாச... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

வேலை வாங்கித் தருவதாக ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை 7-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கோவை ராமநாதபுரம் நாகப்ப தேவா்... மேலும் பார்க்க