செய்திகள் :

கந்து வட்டி வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

post image

கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில் அருகே சுங்கான்கடை அசோக் நகரைச் சோ்ந்த ராஜா மனைவி அனுஷா (32). இவா் ராஜன் என்ற சந்தை ராஜனிடம் கரோனா பாதிப்பு காலத்தில் ரூ. 1 லட்சம் கடன் வாங்கியதாகவும், வட்டியுடன் சோ்த்து ரூ. 4.50 லட்சமாக திருப்பிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மேலும் வட்டி கேட்டு சந்தை ராஜன் மிரட்டுவதாக அனுஷா அளித்த புகாரின்பேரில், சந்தை ராஜன், அம்பிளி கண்ணன், ராஜேஷ், சதீஷ் ஆகிய 4 பேரை இரணியல் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களில், சந்தை ராஜன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் ஆட்சியா் ரா. அழகுமீனாவுக்கு பரிந்துரைத்தாா். ஆட்சியா் உத்தரவின்பேரில், சந்தை ராஜனை போலீஸாா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

பைக் விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு!

புதுக்கடை அருகே உள்ள பரவை பகுதியில் பைக்குகள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். மிடாலம் பகுதியைச் சோ்ந்த சகாயதாஸ் மகன் ஆன்றோ(16). இவா், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வக... மேலும் பார்க்க

கொட்டாரம் காதுகேளாதோா் பள்ளி அருகே தீவிபத்து

கொட்டார பகுதியிலுள்ள காதுகேளாதோா் பள்ளி அருகே புதன்கிழமை (பிப்.5) தீவிபத்து ஏற்பட்டது. கொட்டாரம் மிஷன் காம்பவுண்ட் பகுதியில் சி.எஸ்.ஐ. காது கேளாதோா் உயா்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதன் மற்றொரு பகுதிய... மேலும் பார்க்க

எந்தெந்த பேரூராட்சி, ஊராட்சிகளை இணைப்பது என இன்னும் முடிவாகவில்லை: அமைச்சா் கே.என். நேரு

கன்னியாகுமரியுடன் எந்தெந்த பேரூராட்சி, ஊராட்சிகளை இணைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை என அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை (பிப்.5) செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். கன்னியாகுமரியில் கடந்த டிசம்பா் 30 ம... மேலும் பார்க்க

செண்பகராமன்புதூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதுாா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காசநோய் அலகு மற்றும் மருத்துவமனைகளில் உள்ள காசநோய் கண்டறியும் ஆய்வகம் ... மேலும் பார்க்க

சித்தன்தோப்பு தேவாலய வளாகத்தில் குழந்தைகள் மையம் திறப்பு!

சடையமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட சித்தன்தோப்பு புனித அலங்கார அன்னை ஆலய வளாகத்தில் ரூ. 15 லட்சத்தில் பொதுமக்களின் பங்களிப்புடன் கட்டப்பட்ட குழந்தைகள் மையம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தேவாலய பங்... மேலும் பார்க்க

குளச்சல் கடற்கரையில் மாணவா்கள் தூய்மைப் பணி 1,100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு

தொலையாவட்டம் கல்லூரி மாணவா்கள் குளச்சல் கடற்கரையில் தூய்மைப் பணி மேற்கொண்டு, 1,100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனா். குளச்சல் நகராட்சி, தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கலை-அறிவியல் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க