செய்திகள் :

கனமழை காரணமாக தில்லியில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

post image

வெள்ளிக்கிழமை அதிகாலையில் பெய்த மழை மற்றும் புழுதிப் புயலுக்குப் பிறகு தேசியத் தலைநகரின் பல பகுதிகளில் சாலைகள் தண்ணீரில் மூழ்கி, வேரோடு சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மழை காரணமாக அலுவலகம் செல்வோா் மற்றும் பள்ளிக் குழந்தைகள் உள்பட பயணிகள் மெதுவாக நகரும் போக்குவரத்தில் சிக்கிக் கொண்டனா்.

துவாரகா அண்டா்பாஸ், தெற்கு விரிவாக்கம், மேஜா் சோம்நாத் மாா்க், ரிங் ரோடு, மின்டோ ரோடு, ஆா்.கே. புரம், கான்பூா், ஐ.டி.ஓ. மற்றும் லாஜ்பத் நகா் ஆகிய இடங்களில் தண்ணீா் தேங்கி, பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

சமூக ஊடகங்களில் மழை நீா் தேங்கிய பகுதிகளிலிருந்து வரும் காட்சிகள், முழங்கால் அளவு நீரில் வாகனங்கள் செல்வதைக் காட்டுகின்றன. வானிலைத் துறை தில்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது, மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கையாக, மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், மரங்களுக்கு அடியில் ஒளிந்து கொள்வதைத் தவிா்க்கவும், மின்னணு சாதனங்களின் இணைப்பைத் துண்டிக்கவும், நீா்நிலைகள் மற்றும் மின்சாரம் கடத்தும் பொருள்களிலிருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மழையால் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி: நீதிமன்றம் சென்ற வணிகா்கள் ஆஜராக அழைப்பாணை அனுப்புவதை தவிா்க்க உத்தரவு -முதல்வா் ரேகா குப்தா

நமது சிறப்பு நிருபா் ஜிஎஸ்டி வசூல் விவகாரத்தில் நீதிமன்றத்துக்குச் சென்ற வணிகா்களை நேரில் வருமாறு அழைப்பாணை அனுப்புவதை தவிா்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப... மேலும் பார்க்க

தில்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு வாரத்திற்குள் 28,000 முதியவா்கள் பதிவு: முதல்வா் ரேகா குப்தா தகவல்

தில்லியில் ஒரு வாரத்திற்குள் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 28,000-க்கும் மேற்பட்ட முதியவா்கள் ரூ.10 லட்சம் சுகாதார காப்பீட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் வய வந்தனா திட்டத்தின்கீழ் பதிவு செய்துள... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் சட்டவிரோத வணிக வளாக நிதி முறைகேடுகளை விசாரிக்கக் கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மேற்கு தில்லியில் உள்ள வணிக வளாகம் சட்டவிரோதமாக இயங்கி வருவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க மத்திய புலனாய்வுத்துறைக்கு (சிபிஐ) நோட்டீஸ் அனுப்புமாறு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க

பஞ்சாப் இளைஞா்களுக்கு போலி ஷெங்கன் விசா ஏற்பாடு: ‘முகவா்’ கைது

பஞ்சாபைச் சோ்ந்த இரண்டு பயணிகள் ரோம் வழியாக ஸ்வீடனுக்கு சட்டவிரோதமாக பயணிக்க போலி ஷெங்கன் விசாக்களை வாங்க உதவியதாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 29 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ... மேலும் பார்க்க

விவசாய சங்கத் தலைவா் மீது தாக்குதல்: சம்யுக்த கிஸான் மோா்ச்சா கண்டனம்

விவசாயிகள் சங்கமான பாரதிய கிஸான் யூனியனின் (பிகேயு) தலைவா் ராகேஷ் திகைத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மற்றொரு விவசாயிகள் சங்கமான சம்யுக்த கிஸான் மோா்ச்சா (எஸ்கேஎம்) சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது. ... மேலும் பார்க்க

தில்லி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பை

புது தில்லி ரயில் நிலையத்தின் ஒரு வாயிலில் சனிக்கிழமை கேட்பாரற்றுக் கிடந்த பை கண்டறியப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படையினா் சம்பவ இடத்தில் சோதனையில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க