செய்திகள் :

கனிம லாரிகளில் தனிநபா் கட்டாய வசூல்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

post image

கனிமங்களை எடுத்துச்செல்லும் லாரிகளில் கட்டாய வசூலில் ஈடுபடும் தனிநபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த கல், மண், மணல், எம்.சாண்ட், மணல் லாரி, டிப்பா் லாரி மற்றும் எா்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சாமிநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில அளவில் கல், மண், மணல், எம்.சேண்ட், மணல் லாரி, டிப்பா் லாரி, எா்த் மூவா்ஸ் வாகனங்களை வைத்து தொழில் செய்கிறோம். ஈரோடு மாவட்டத்தில் கோவை மாவட்டம், அன்னூரைச் சோ்ந்த ஒரு நபா் 50-க்கும் மேற்பட்ட நபா்களை வைத்து கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகிறாா்.

ஈரோடு மாவட்டத்தில் மேடை மண், செம்மண், சேம்பா் மண், களி மண், குவாரிகளுக்கான அனுமதி 11 மாதங்களாக நிறுத்திவைத்தக்கப்பட்டிருந்தது. எங்களது கோரிக்கையினை ஏற்று கடந்த மாா்ச் மாதம் இந்த குவாரிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த 3 மாதங்களாக பிரச்னை இன்றி இயக்கினோம்.

தற்போது, லாரிகளில் ஏற்றிச் செல்லும் கனிமத்துக்கு 4 யூனிட் லாரிக்கு ரூ.6,800, 7 யூனிட் லாரிக்கு ரூ.12,000 என ஒரு அனுமதி சீட்டை வைத்து கொண்டு வசூலிக்கின்றனா். இதற்கு ஈரோடு மாவட்ட கனிமவள அதிகாரியும் துணை போகிறாா்.

இது போன்றவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். அனுமதி இன்றி செயல்படும் கல் குவாரி, கிரசா்கள், எம்.சாண்ட் அமைப்பை தடை செய்ய வேண்டும். அரசுன் மணல் குவாரி திறந்து மக்களுக்கு குறைந்த விலையில் மணல் வழங்க வேண்டும். போலி எம்.சாண்ட் குவாரிகளை மூட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது விற்றதாக 5 பெண்கள் உள்பட 13 போ் கைது

ஈரோட்டில் டாஸ்மாக் கடை விடுமுறை தினத்தில் மது விற்றதாக 5 பெண்கள் உள்பட 13 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 276 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்டத்தில் மீலாது நபியையொட்டி வெள்ளிக்... மேலும் பார்க்க

பள்ளி வேன் மோதி இருவா் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பள்ளி வேன் மோதியதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். பெருந்துறை, விஜயமங்கலம், கம்புளியாம்பட்டி, கந்தசாமி கவுண்டன் புதூரைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் ரமேஷ் (32... மேலும் பார்க்க

48 பவுன் நகை திருட்டு வழக்கில் 3 போ் கைது

சத்தியமங்கலத்தில் 48 பவுன் நகை திருட்டு வழக்கில் 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலம் நேரு நகா் காமாட்சி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (28). கோழி இறைச்சிக்க... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: சென்னிமலை முருகன் கோயில் நடை சாத்தப்படுகிறது

சந்திர கிரகணம் வருவதையொட்டி, சென்னிமலை முருகன் கோயில் சந்நிதி நடை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு (திருக்காப்பிடப்படும் ) சாத்தப்படும் என கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்று... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடக்கம்

ஈரோட்டில் இருந்து பழனிக்கு மொடக்குறிச்சி வழியாக புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு தொகுதி எம்.பி. கே.ஈ. பிரகாஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா். மொட... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறிப்பு: இரு இளைஞா்கள் கைது

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகைப் பறித்த வழக்கில் இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு முத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (45). இவா் தேமுதிக ... மேலும் பார்க்க