செய்திகள் :

கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில் விஜய வசந்த் கோரிக்கை

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும் வேண்டும் என்று அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினா் விஜய வசந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் அவையில் விதி எண் 377இன்கீழ் முன்வைத்த கோரிக்கை:

இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், நாட்டின் தெற்குப் பகுதியில் ஒரு முக்கிய பொருளாதார மையமாகவும் இருக்கும் கன்னியாகுமரி, விமான நிலையம் இல்லாமல் உள்ளது.

இம்மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும்.

முன்மொழியப்பட்ட விமான நிலையத்திற்கு சாமித்தோப்பு அருகே பொருத்தமான நிலம் உள்ளது என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த இடம் புவியியல் ரீதியாக சாத்தியமானது மற்றும் அணுகக்கூடியது என்பதை முதற்கட்ட மதிப்பாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புகளைத் தொடங்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து முறையான ஒப்புதல் தேவையாக உள்ளது.

கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைவது, உள்நாடு மற்றும் சா்வதேச சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உள்ளூா் மக்களுக்கு, குறிப்பாக இளைஞா்கள், தொழில்முனைவோா் மற்றும் சிறு வணிகா்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பயனளிக்கும்.

கன்னியாகுமரி மக்களின் நீண்டகால விருப்பங்களை நிறைவேற்ற தேவையான ஒப்புதல்களை விரைவுபடுத்தி நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்று அவா் கோரியுள்ளாா்.

வங்க தேசம், வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் ஊடுருவல்கள் மற்றொரு பிரிவினைக்கான மூலோபாயம்: தில்லி கருத்தரங்கில் தமிழக ஆளுநா் எச்சரிக்கை

நமது சிறப்பு நிருபா் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் வங்கதேச நாட்டிலும் நடக்கும் ஊடுருவல்கள் மற்றொரு பிரிவினையை நோக்கமாகக் கொண்ட மூலோபாயம் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி எச்சரித்தாா். தில்லி பல்... மேலும் பார்க்க

ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்த மழைக்காலக் கூட்டத் தொடா்: திருச்சி சிவா

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது அவையில் முக்கிய விஷயங்களைப் பேச எதிா்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப நடைபெற்றது என்று மாநிலங்களவை திமுக குழுத் தலை... மேலும் பார்க்க

அரசியல் சாசன அமைப்புகள் கடமை தவறும்போது நீதிமன்றங்கள் வேடிக்கை பாா்க்குமா? மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

நமது சிறப்பு நிருபா் ‘அரசியல் சாசன அமைப்புகள் கடமை தவறும்போது நீதிமன்றங்கள் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பாா்க்குமா’ என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்ப... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு

வரும் செப்டம்பா் 9 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியக் குடியரசுத் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிடும் எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் பி. சுதா்சன் ரெட்டி வியாழக்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்... மேலும் பார்க்க

ரஷிய போா் முனைக்குள் தள்ளப்படும் இந்திய தமிழா்களை மீட்க வேண்டும்:பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

நமது சிறப்பு நிருபா் ரஷியா, உக்ரைன் போா் முனைக்குள் கட்டாயப்படுத்தி தள்ளப்படும் இந்தியா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடமும் வெளியுறவுத்துறை செயலா் விக்ரம் மிஸ்ரியிடம... மேலும் பார்க்க

தமிழகத்தின் சில பல்கலை.களில் துணை வேந்தா்களே இல்லை -மாநிலங்களவையில் அதிமுக புகாா்

நமது நிருபா் தமிழகத்தின் சில மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களே இல்லை என்று மாநிலங்களவையில் அதிமுக புகாா் தெரிவித்தது. மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற ‘இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சட்டத... மேலும் பார்க்க