செய்திகள் :

கபில்தேவ், ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை முறியடித்த ஜடேஜா!

post image

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி மகராஷ்டிரத்தின் நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் முறையே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான இருதரப்பு ஒருநாள் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா, முன்னாள் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை முந்தி முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

இதையும் படிக்க | லாகூர் கடாபி திடல் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு! -பாக். கிரிக்கெட் வாரியம்

2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அறிமுகமானதிலிருந்து, அவர் 198 போட்டிகளில் 35.85 சராசரியுடன் 222 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இருதரப்பு போட்டிகளில் மொத்தமாக 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 31 போட்டிகளில் 40 விக்கெட்டுகளும், ஆண்ட்ரூ பிளின்டாஃப் 37 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங் 36 விக்கெட்டுகளும், ஜவகல் ஸ்ரீநாத் / ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் 35 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

மேலும், ஒரு சாதனையாக ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளையும் எட்டி, இந்த மைல்கல்லை எட்டிய ஆறாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

கபில்தேவுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ரன்கள் மற்றும் 600 விக்கெட்டுகளை எடுத்த 2-வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

இதையும் படிக்க |ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் கொங்கடி த்ரிஷா!

முதல் ஒருநாள்: மூவர் அரைசதம்; இந்தியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று (பிப்ரவர... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் திடீர் விலகல்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான தென்னாப்பிரிக்க அணியில் இருந்து முன்னணி பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் த... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் விலகல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் இருவரும் விலகியுள்ளனர்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ... மேலும் பார்க்க

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் கொங்கடி த்ரிஷா!

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை கொங்கடி த்ரிஷா இடம்பெற்றுள்ளார்.ஜனவரி மாதத்தில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் ஒருவருக்கு ஐச... மேலும் பார்க்க

முதல் ஒருநாள்: இருவர் அரைசதம்; இந்தியாவுக்கு 249 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று (பிப்... மேலும் பார்க்க

அசத்திய ஆஸி.: முதல்நாளில் 9 விக்கெடுகளை இழந்த இலங்கை அணி!

காலேவில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட்டில் இலங்கை அணி முதல்நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. உணவு இடைவேளை வரை 1 விக்கெட் மட்டுமே இழந்திருந்த இலங்கை அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெடுகள் இழப்புக்கு 22... மேலும் பார்க்க