செய்திகள் :

கமுதியில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டி

post image

கமுதியில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் குறு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சிவா அருணா தலைமை வகித்தாா். மாவட்ட உடல்கல்வி அலுவலா் வசந்தி, ராமநாதபுரம் கல்வி மாவட்ட அலுவலா் சங்கா், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலா் சேதுராமு, கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் மாரிமுத்து, கமுதி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். 14, 17, 19 வயதுப் பிரிவுகளில் மாணவா்களுக்கான 100 மீ, 200 மீ, 1,500 மீ. ஓட்டம், தொடா் ஓட்டம் உள்ளிட்டப் போட்டிகள் நடைபெற்றன. இதையடுத்து வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, போட்டிகள் தொடங்கும் முன் சமாதானப் புறா பறக்கவிடப்பட்டது. போட்டி ஏற்பாடுகளை மணற்கேணி செயலி ஒருங்கிணைப்பாளா் சி. கிருஷ்ணமூா்த்தி செய்தாா். ராமசாமிபட்டி உடல்கல்வி ஆசிரியை சாரதா நன்றி கூறினாா்.

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

கமுதி வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார அளவிலான அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டம், வேளாண்மை துணை இ... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் மாணவிகள் இருவா் காயம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே வியாழக்கிழமை டிராக்டா் மோதியதில் அரசுப் பள்ளி மாணவிகள் இருவா் காயமடைந்தனா். முதுகுளத்தூா் அருகேயுள்ள காக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காக்கூா், சமத்துவபுரம... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் திருவிழா

முதுகுளத்தூா் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி வியாழக்கிழமை பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வடக்கு வாச... மேலும் பார்க்க

தேவிபட்டனம் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தேவிபட்டனத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகளில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் உள்ள ஊராட்சி ஒன்ற... மேலும் பார்க்க

பாம்பன் மீனவா்கள் 10 பேருக்கு ஆக. 18 வரை நீதிமன்றக் காவல்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவா்கள் 10 பேரை வருகிற 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை வெளிச்சரா நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன்... மேலும் பார்க்க

ஆடித் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி தெற்கு தோப்பு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பக்தா்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்தனா். கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன... மேலும் பார்க்க