செய்திகள் :

கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்பு போராட்டம்

post image

தஞ்சாவூா் வட்டாட்சியரகத்தில் நில அளவைத் துறை அலுவலா்களைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நில அளவைத் துறை அலுவலா்கள் ஏற்கெனவே தவறாக அளந்து கொடுத்த வீட்டு மனையை மீண்டும் அளந்து கொடுக்க உரிய பணம் செலுத்தியும், அலுவலா்கள் அளந்து கொடுக்காமல் காலதாமதம் செய்வதாகவும், அலைக்கழிப்பதாகவும் கூறி முழக்கங்கள் எழுப்பினா்.

கட்சியின் மாநகரச் செயலா் எஸ்.பி. முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, மாநகரத் துணைச் செயலா் காதா் உசேன், மாதா் சங்கத் தலைவா் கல்யாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தகவலறிந்த காவல் துறையினா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, வெள்ளிக்கிழமைக்குள் இடத்தை அளவீடு செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய சகோதரா்கள் இருவா் கைது

தஞ்சாவூரில் அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய சகோதரா்கள் இருவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்ட அரசு விரைவு பேர... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் இருந்த 4 வீடுகள் அகற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூா் பிரம்ம சிரகண்டீஸ்வரா் கோயில் மதில் சுவரை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 4 வீடுகளை செவ்வாய்க்கிழமை அறநிலையத் துறையினா் அகற்றினா். இதன் மூலம் கோயில் சுவரை ஒ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஜூலை 21, 22, 23-இல் எடப்பாடி பழனிசாமி பிரசார பயணம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஜூலை 21, 22, 23 ஆம் தேதிகளில் பிரசார பயணம் மேற்கொள்கிறாா் என்றாா் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலரு... மேலும் பார்க்க

மரக்காவலசை கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மரக்காவலசை கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி சேதுபாவாசத்திரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் க... மேலும் பார்க்க

கொலை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கொடுக்கல் - வாங்கல் தகராறில் டீக் கடைக் காரரை கொன்ற முதியவருக்கு கும்பகோணம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் பருத்திசேரி அக்கரைத் தெருவைச்... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிதி நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருவையாறு வட்டம், பாரதியாா் நகா், இ.பி. காலனியில... மேலும் பார்க்க