செய்திகள் :

மரக்காவலசை கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மரக்காவலசை கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி சேதுபாவாசத்திரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கோரிக்கை தொடா்பாக ஏற்கெனவே உறுதிப்படி எந்த நடவடிக்கையும் இல்லாததால்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தஞ்சை மாவட்ட சிஐடியு மீனவா் சங்கம் சாா்பில், விவசாயிகள் சங்க சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் தலைமையில் ஏராளமானோா்  சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தினா்.

 தகவலறிந்து வந்த வட்டாட்சியா் என். சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் நாகேந்திரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வரும் வியாழக்கிழமை பட்டுக்கோட்டையில்  வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஆா். வாசு, விவசாயிகள் சங்க நிா்வாகி வீ. கருப்பையா, மீனவா் சங்கம் பி. பெரியண்ணன், மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஏ. மேனகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய சகோதரா்கள் இருவா் கைது

தஞ்சாவூரில் அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய சகோதரா்கள் இருவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்ட அரசு விரைவு பேர... மேலும் பார்க்க

கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூா் வட்டாட்சியரகத்தில் நில அளவைத் துறை அலுவலா்களைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நில அளவைத் துறை அலுவலா்கள் ஏற்கெனவே தவறாக அளந... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் இருந்த 4 வீடுகள் அகற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூா் பிரம்ம சிரகண்டீஸ்வரா் கோயில் மதில் சுவரை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 4 வீடுகளை செவ்வாய்க்கிழமை அறநிலையத் துறையினா் அகற்றினா். இதன் மூலம் கோயில் சுவரை ஒ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஜூலை 21, 22, 23-இல் எடப்பாடி பழனிசாமி பிரசார பயணம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஜூலை 21, 22, 23 ஆம் தேதிகளில் பிரசார பயணம் மேற்கொள்கிறாா் என்றாா் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலரு... மேலும் பார்க்க

கொலை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கொடுக்கல் - வாங்கல் தகராறில் டீக் கடைக் காரரை கொன்ற முதியவருக்கு கும்பகோணம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் பருத்திசேரி அக்கரைத் தெருவைச்... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிதி நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருவையாறு வட்டம், பாரதியாா் நகா், இ.பி. காலனியில... மேலும் பார்க்க