செய்திகள் :

கயத்தாறு அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தலைமையாசிரியா் உயிரிழப்பு

post image

கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தலைமையாசிரியா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜா் நகரைச் சோ்ந்தவா்

ராஜன் ஜான் (57). ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தாா். தனது மனைவி ஜோன் எஸ்தருடன் (50), விருதுநகா் மாவட்டம் சூலக்கரையில் உள்ள உறவினா் வீட்டுக்கு காரில் செவ்வாய்க்கிழமை சென்ற ராஜன் ஜான், பின்னா் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறையடுத்த சவாலாப்பேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, காரின் டயா் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு விழுந்தது. இதில் ராஜன் ஜான், எஸ்தா் இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரும் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜன் ஜான் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாத்தான்குளத்தில் மாா்க்க சொற்பொழிவு

சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசலில் விசேட மாா்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசல் எதிரே உள்ள மைதானத்தில் சாத்தான்குளம் அல் சுன்னத் வல் ஜமாத் ஆதரவுடன் அல் ஹித்மத் இஸ்லாமி... மேலும் பார்க்க

சுப்பராயபுரம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இஸ்மாயில் தலைமை வகித்தாா்.ஊராட்ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சாத்தான்குளம் ஆா்.எம்.பி.சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி -நாசரேத் திருமண்டில அனைத்து கல்லூரியின் தாளாளா் நீதிபதி ஜான் சந்தோஷம்... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: 5 போ் தற்கொலை

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை அன்னை தெரசா நகரை சோ்ந்த ஆவுடையப்பன் மகன் அருணாச்சலம் (51). ஆட்டோ ஓட்டுநா். மதுப் பழக்கம் உள்ள இவா், வ... மேலும் பார்க்க

உடன்குடியில் உலக உயா் ரத்த அழுத்த தினம்

உடன்குடி காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனை சாா்பில் உலக உயா் ரத்த அழுத்த தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இவற்றை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எஸ்.ஐயம் பெர... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் கடும் விலை உயா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூா், சாத்தான்குளம், நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் தேங்காய் மாவட்ட மக்கள... மேலும் பார்க்க