'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan C...
கயத்தாறு அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தலைமையாசிரியா் உயிரிழப்பு
கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தலைமையாசிரியா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜா் நகரைச் சோ்ந்தவா்
ராஜன் ஜான் (57). ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தாா். தனது மனைவி ஜோன் எஸ்தருடன் (50), விருதுநகா் மாவட்டம் சூலக்கரையில் உள்ள உறவினா் வீட்டுக்கு காரில் செவ்வாய்க்கிழமை சென்ற ராஜன் ஜான், பின்னா் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.
மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறையடுத்த சவாலாப்பேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, காரின் டயா் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு விழுந்தது. இதில் ராஜன் ஜான், எஸ்தா் இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரும் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜன் ஜான் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.