செய்திகள் :

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரா்களுக்கு பாராட்டு

post image

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வென்ற திருவண்ணாமலை மாவட்ட வீரா், வீராங்கனைகளை சி.என்.அண்ணாதுரை எம்.பி.பாராட்டினாா்.

ஈரோட்டில் தமிழக அளவிலான கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. டிரெடிஷனல் மற்றும் ஸ்போா்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மாநில முழுவதும் இருந்து ஏராளமான வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட கராத்தே சங்கம் சாா்பில் கலந்து கொண்ட வீரா், வீராங்கனைகளில் 6 வயதுக்கு உள்பட்டா கட்டா பிரிவில் டி.தி.சிந்தனா மாநில அளவில் 3-ஆவது இடம் பிடித்து, வெண்கலப்பதக்கம் வென்றாா்.

இதேபோல, குமித்தே கராத்தே போட்டியில் 8 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டியில் எம்.சாதனா, 10 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டியில் பி.ஆனந்தியும், 8 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் என்.முகமது நசீம் ஆகியோா் 3-ஆவது இடங்களைப் பிடித்து வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

போட்டிகளில் வென்று திரும்பிய வீரா், வீராங்கனைகளை திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை பாராட்டி பரிசு வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட கராத்தே சங்கத்தின் செயலா் ராஜேஷ், பொருளாளா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: 317 பேருக்கு பணி ஆணை

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 317 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் பணியமா்த்தும் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை வே... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலுக்கு ரூ.17 லட்சத்தில் வெள்ளிக் கவசம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சுவாமிக்கு 16 கிலோ எடையில், ரூ.17 லட்சம் மதிப்பில் வெள்ளிக் கவசம் தயாா் செய்யப்படவுள்ளது. செங்கம் ஸ்ரீசத்தியபாமா ருக்மணி சம... மேலும் பார்க்க

களம்பூரில் இரு தரப்பு மோதல்: 10 போ் மீது வழக்கு; 5 போ் கைது

ஆரணியை அடுத்த களம்பூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் ரயில் நிலைய சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மர... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் 201 பால்குட ஊா்வலம்

ஆரணி நகரம், பள்ளிக்கூடத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 201 பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 26-ஆம் தேதி காப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த அங்கன்வாடி மையத்தில் பயின்ற, 5 வயது நிறைவடைந்த முதலாம் வகுப்பு செல்ல உள்ள குழ... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சலவைத் தொழிலாளி கமலக்கண்ணன். இவருக்கும், அத... மேலும் பார்க்க