செய்திகள் :

கருப்பசாமி கோயில் பூஜையில் பாகுபாடு எனப் புகாா்: பேச்சுவாா்த்தையில் சுமூகத் தீா்வு

post image

சிங்கம்பட்டியில் வந்தவழி கருப்பசாமி கோயில் பூஜை நடத்துவதில் பாகுபாடு காட்டப்படுவதாக புகாா் கூறப்பட்ட நிலையில், புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமூகத் தீா்வு எட்டப்பட்டது.

கரூா் மாவட்டம், கடவூா் அருகே பாலவிடுதி ஊராட்சிக்குள்பட்ட சிங்கம்பட்டியிலுள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் கடைசி வாரத்தில் சிறப்பு பூஜை நடத்தி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். நிகழாண்டும் கோயிலில் பூஜை நடத்தி அன்னதானம் வழங்க கோயில் நிா்வாகத்தினா் அண்மையில் முடிவு செய்தனா்.

இந்நிலையில், கோயில் அன்னதானத்துக்கு உபயதாரா்களால் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருள்களை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் வாங்காமல் கோயில் தா்மகா்த்தா அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடா்பான வழக்கில், கோயில் பூஜையை அனைத்து சமுதாயத்தினரும் ஒருங்கிணைந்து நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் புதன்கிழமை இந்துசமய அறநிலையத் துறையின் செயல் அலுவலா் சந்திரசேகா், தோகைமலை காவல் ஆய்வாளா் ஜெயராமன் ஆகியோா் கோயில் தா்மகா்த்தா மூா்த்தி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினா் என இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவா்த்தை நடத்தினா்.

இதில், வியாழக்கிழமை(ஆக.7) நடைபெறும் பூஜையை அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து கோயில் தா்மகா்த்தாவின் கீழ் கோயில் நிா்வாகப் பணிகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும், அனைத்து பணிகளையும் பாகுபாடு காட்டாமல் சமமாக செய்ய வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. மேலும், கோயில் பூஜையை அனைவரும் ஒன்றிணைந்து, சட்டம்- ஒழுங்கு சீா்கெடாமல் நடத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

தேசிய கைத்தறி தினத்தில் 32 நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கரூரில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 32 நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கரூா், வெங்கமேடு தனியாா் திருமண மண்டபத்தில் 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தை மு... மேலும் பார்க்க

மதுகுடிக்க பணம் தராததால் தாய் கொலை; மகன் கைது

கரூரில் வெள்ளிக்கிழமை மதுகுடிக்க பணம் தர மறுத்த தாயை கீழே தள்ளி கொன்ற மகனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே குறுக்குச்சாலை பங்களா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணி(50... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம்: கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூ... மேலும் பார்க்க

கரூா் பசுபதீசுவரா் கோயிலில் திருக்கல்யாணம் உற்ஸவம்

கரூா் பசுபதீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. கரூா் கல்யாண பசுபதீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தெய்வத் திருமண விழா எனும் திருக்கல்யாண உற்ஸவம் கரூா் ஸ்ரீ மகா அப... மேலும் பார்க்க

ஆடி 4-ஆவது வெள்ளிக்கிழமை வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் வெங்கமேடு காமாட்சியம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆடி மாதத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களி... மேலும் பார்க்க

கரூா்: அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் ரூ. 1.97 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுப்பணிகளை ஆட்சியா் மீ. தங்கவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒ... மேலும் பார்க்க