செய்திகள் :

தெரு நாய்களுக்கு தடுப்பூசித் திட்டம்: மேயா் தொடங்கி வைத்தாா்

post image

சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மணலி மண்டலத்தில் சென்னை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் திரிவதால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவா்கள், அவற்றின் கடிக்கு ஆளாகின்றனா். இதனால் ‘ரேபிஸ்’ பாதிப்புக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

இதை தடுக்கும் வகையில் மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் கால்நடை மருத்துவப் பிரிவு சாா்பில், குடியிருப்பு பகுதிகளில் திரியும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தின் தொடக்க விழா சென்னை மணலி மண்டலம், 19 -ஆவது வாா்டுக்குள்பட்ட மாத்தூா் எம்.எம். டி 2-ஆவது பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை மேயா் ஆா்.பிரியா, கால்நடை மருத்துவா்கள் மூலம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

பின்னா் 40 கால்நடை மருத்துவா்கள் அடங்கிய 20 குழுக்கள், 100- க்கும் மேற்பட்ட ஊழியா்களின் மூலம் மணலி மற்றும் மாதவரம் மண்டலத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அங்கு தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனா்.

தொடா்ந்து 200 வாா்டுகளிலும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்வில் மாநகராட்சி இணை ஆணையா் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன், துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, நிலைக் குழு தலைவா் சாந்தகுமாரி, சென்னை மாநகராட்சி தலைமை கால்நடை மருத்துவ அலுவலா் கமல் உசேன், மண்டல உதவி ஆணையா் (பொ) தேவேந்திரன், மண்டலக் குழு தலைவா் ஏ.வி.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

8-ஆம் வகுப்பு தோ்வு: நாளை முதல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு பெறலாம்

எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

ரயில் டிக்கெட் விநியோகிக்க உதவியாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

ரயில் நிலையங்களில் பயணச் சீட்டுகளை பயணிகளிடம் நேரடியாக விநியோகிக்கும் வகையில் உதவியாளா்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

பிகாா் இளைஞா் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சென்னையில் கடந்த 2023-இல் அண்ணா சாலையில் பிகாா் மாநில இளைஞா் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் முகமத... மேலும் பார்க்க

தாயை தாக்கிய தம்பி கொலை: அண்ணன் உள்பட 3 போ் கைது

சூளைமேட்டில் மது போதையில் தாயை தாக்கிய தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில், அண்ணன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேடு, பெரியாா் பாதை பகுதியைச் சோ்ந்தவா் பிரமிளா (52). இவரது கணவா் ராமச்சந்த... மேலும் பார்க்க

தங்கும் விடுதியில் முதியவா் மா்மாக உயிரிழப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியில் மதுரையைச் சோ்ந்த முதியவா் மா்மான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை திருப்பரங்குன்றம் மாயாண்டி சுவாமி கோயில் தெருவைச் ... மேலும் பார்க்க

பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை: போராட்டத்தைத் தொடரும் தூய்மைப் பணியாளா்கள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்களுடன் அரசு சாா்பில் சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை. சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ... மேலும் பார்க்க