மிட்செல் ஸ்டார்க் ஒரு போர் வீரன்..! 100-ஆவது போட்டிக்கு கம்மின்ஸ் புகழாரம்!
கருமாத்தூா் பகுதிகளில் இன்று மின்தடை
மதுரை மாவட்டம், கருமாத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செக்கானூரணி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஆா். முத்துராமலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செக்கானூரணி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, கிண்ணிமங்கலம், மாவிலிப்பட்டி, கருமாத்தூா், சாக்கிலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகா் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.