செய்திகள் :

கரூரில் குரூப்-2 தோ்வு: 282 போ் எழுதினா்

post image

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 போட்டித் தோ்வை 282 போ் எழுதினா். 15 போ் எழுதவில்லை.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் -2 முதன்மை எழுத்துத் தோ்வு கரூரில் சனிக்கிழமை தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இந்த தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியது, தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்- 2 முதன்மை எழுத்து தோ்வு தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் மையத்தில் நடைபெறுகிறது. இத்தோ்வுக்கு 297 தோ்வா்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 282 போ் தோ்வு எழுதினா். 15 போ் எழுத வரவில்லை என்றாா் அவா்.

ஆய்வின்போது தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைய உதவி பிரிவு அலுவலா் வாசுதேவன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், கரூா் வட்டாட்சியா் குமரேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

ஈரோடு இடைத்தோ்தல் வெற்றி! கரூரில் திமுகவினா் கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுக வெற்றிபெற்றதையடுத்து, கரூரில் திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாடினா். ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இதில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரக... மேலும் பார்க்க

கரூரில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள் தொடக்கம்!

கரூரில் அரசு பள்ளிக்குச் சுற்றுச்சுவா் கட்டும் பணி உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை துவக்கி வைத்தாா். கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பெரியகுளத்துப்பா... மேலும் பார்க்க

இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது!

கரூா் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலையில் தொடா்புடைய குற்றவாளி 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா். கரூரை அடுத்துள்ள மணவாடி கிராமத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு நிலத்தகராறில் கணவன், மனைவியை கரூா் ராயன... மேலும் பார்க்க

கரூரில் கடும்பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

கரூரில் வெள்ளிக்கிழமை காலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 8 மணி வரை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைக... மேலும் பார்க்க

மினி பேருந்து சேவை: பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்

மினி பேருந்துகளை சேவையில் பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மினி பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூரில் தமிழ்நாடு மினி பேருந்து உ... மேலும் பார்க்க

கோயில் திருப்பணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரூ. 60 ஆயிரம் நிதி

பகவதி அம்மன் கோயில் திருப்பணிக்காக முன்னாள் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் செ.காமராஜ் தனது இரு மாத ஓய்வூதியத் தொகையான ரூ. 60 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை வழங்கினாா். கரூா் நகரம், முத்துராஜபுரத்தில்... மேலும் பார்க்க