செய்திகள் :

கரூர் மரணங்கள்: "தனிநபர் மீது பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை" - முதல்வர் ஸ்டாலின்

post image

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 2-ம் நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இதில் கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விவாதங்கள்தான் அனலாகப் பறந்தன.

இன்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "விஜய் கரூருக்கு முன்னதாகவே திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் என்று 4 மாவட்டங்களில் பிரசாரம் செய்திருக்கிறார். கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது?" என்று கேள்விக் கனைகளைத் தொடுத்து திமுக அரசை விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "காவல்துறை சரியாகச் செயல்பட்டதற்கு சல்யூட் அடித்தார் தவெக தலைவர். செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு தவெக தலைவர் கரூர் வருவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக அவர் வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம்" என்று பதிலளித்திருந்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி
செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சட்டசபையில் நடந்த காரசார விவாதம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் மு.க.ஸ்டாலின், "கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை.

எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.

இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

"கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையம்; தமிழ் அதிகாரிகள் இடம்பெறக் கூடாதா?" - சீமான் கண்டனம்

கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக் ... மேலும் பார்க்க

"விஜய்யின் கூட்டணிக்காக சட்டமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கிறதா?" -அதிமுக ராஜேந்திர பாலாஜி பதில்

Qசமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியாக இருக்கும்" என்று பேசி கூட்டத்தில் தவெக கொடி அசைவதைப் பார்த்து, "இப்போவே கொடி அசைத்து பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என்று அதிமுக ... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை: ``புதிதாக விண்ணப்பித்தோருக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல்"- உதயநிதி சொன்ன அப்டேட்

2023ம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வகிக்கும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட... மேலும் பார்க்க

`₹15,000 கோடி முதலீடு; 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு' -தமிழக அரசு அறிவிப்பு; foxcon நிறுவனம் மறுப்பு

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியிருந்தார். இந்த சந்திப்பின்போது ஃபாக்ஸ்கான் நிறுவனம் ₹15,000 கோடி முத... மேலும் பார்க்க

``இந்தி மொழிக்கு தடையா? வதந்திகளைப் பரப்பாதீர்கள்" - TN Fact check

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களிலும் மத்திய பா.ஜ.க அரசு இந்தி மொழியை திணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணிக்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில், இரு... மேலும் பார்க்க

மதுரை: மேயர் இந்திராணி ராஜினாமா!

மதுரை மாநாகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசரணையை தொடங்கியது. இந்த வழக்கில் மாநகராட்சி பி... மேலும் பார்க்க