செய்திகள் :

கரூர்: மூளைச்சாவு அடைந்த சிறுமி; உறுப்பு தானம் செய்து 5 பேரின் உயிரைக் காத்த பெற்றோர்; என்ன நடந்தது?

post image

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சீரங்கவுண்டனூரைச் சேர்ந்தவர்கள் ரவி, செல்வநாயகி தம்பதியினர். இவர்களுக்கு, தன்யா, ஓவியா (வயது 7) என்று இரண்டு மகள்கள் இருந்தனர்.

இவர்கள் குடும்பத்துடன் ஓசூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர், பைனான்ஸ் தொழில் மற்றும் விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 29-ம் தேதி அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் அவருடைய மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் சிறுமி ஓவியா சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வேகத்தடையில் செல்லும் பொழுது குழந்தை ஓவியா தவறி விழுந்து தலையில் அடிபட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

oviya
oviya

ஓவியாவின் உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்ய முடிவெடுத்தனர். இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள கே‌.எம்‌.சி மருத்துவமனையில் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

இதில், கண்கள், சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானம் செய்யப்பட்டது. உயிரிழந்த ஓவியாவின் உடல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சீரங்ககவுண்டனூரில் உள்ள அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து மாணவியின் தந்தை,

"எனது மகள் சுறுசுறுப்பாக நல்ல நிலையில் இருந்தபோது எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். எனது மகள் என்னுடன் இல்லாவிட்டாலும் உறுப்புகள் ஐந்து பேருக்குப் பயன்படும் வகையில் தானம் செய்யப்பட்டுள்ளது.

oviya family
oviya family

திடீர்னு ஏற்பட்ட உயிரிழப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் மகளின் உடல் உறுப்புகள் நான்கு பேர் பயன்படுத்தி அதன் மூலமாக எங்களுடன் உயிர் வாழ்கிறார்கள் என்பது மன நிம்மதியைத் தருகிறது" என்றார்.

ஓவியாவின் இறுதிச்சடங்கின் போது, பாரம்பர்ய முறைப்படி இறுதிச் சடங்கு நடைமுறைகளை முடித்து விட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டபோது, அங்குக் குழுமி இருந்த ஓவியாவின் உறவினர்கள், பொது மக்களின் அலறல் சத்தம், ஒருபுறம் நெஞ்சைப் பதற வைத்தது.

ஓவியா மீண்டும் மறுபிறவி எடுத்ததைப்போல, குறைந்தபட்சம் ஐந்து பேர்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்கப் போகிறார் என்ற தன்னம்பிக்கையை சமூகத்தில் விதைத்திருக்கிறார்கள் ஓவியாவின் பெற்றோர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சென்னை: விஷப்பூச்சி கடித்து இளம் பெண் மரணம்? காவல்துறை சொல்வது என்ன?

சென்னையில் விஷப் பூச்சி கடித்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை, ஆவடி, கண்ணப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் சர்மிளா (19).கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29ம் தேதி) ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு; குற்றாலம் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

ராமநாதபுரம் செட்டியார் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜன். அரிசி வியாபாரம் செய்து வரும் இவர் தனது மனைவி யமுனா மற்றும் மகன், மகள் ஆகியோருடன் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதற்காக நேற்று நள்... மேலும் பார்க்க

மும்பை: முதல் பிறந்தநாள், கேக் வெட்டிய சில மணி நேரத்தில் சோகம்; கட்டிடம் இடிந்து 14 பேர் உயிரிழப்பு

மும்பையில் கடந்த இரண்டு வாரமாக கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. மும்பை அருகே உள்ள விராரில், விஜய் நகரில் இருக்கும் ரமாபாய் அபார்ட்மெண்ட் என்ற நான்கு மாடி கட்டிடம் நேற்று அதிகாலை த... மேலும் பார்க்க

சேலம்: வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பு; பிடிக்க முற்பட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜமுருகன் (21) என்ற இளைஞர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். தந்தையை இழந்த இளைஞர் ராஜமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: திருட்டு பைக், பட்டா கத்தி... விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்!

திண்டுக்கல் நாகல் நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில் மினி பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார். அவர் வந்த வாகனத்தில் பட்டா கத்தி இருந்ததால... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றிய ராணுவ வீரர்; உடல் நலக்குறைவால் உயிரிழப்பு... விருதுநகரில் சோகம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி, வீரஓவம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் சரண் (29) இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவ... மேலும் பார்க்க