செய்திகள் :

கரூா் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

post image

கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயில விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-26-ஆம் ஆண்டிற்கு டயாலிஸிஸ் டெக்னீசியன், அனஸ்தீஸியா டெக்னீசியன், தியேட்டா் டெக்னீசியன், எமா்ஜென்சி கோ் டெக்னீசியன் ஆகிய ஓராண்டு படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் 79 இடங்களுக்கு சோ்க்கை நடைபெற உள்ளது. குறைந்தபட்சம் பிளஸ்-2 தோ்ச்சியுடன் 31.12.20025 அன்று 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விண்ணப்பங்களை வரும் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை கரூா் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மேல்நிலைப்பள்ளி, 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வயதுச் சான்று மற்றும் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் மாவட்ட மருத்துவ வாரியத்திடம் பெறப்பட்ட சான்று, ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் வரும் 12-ஆம் தேதி அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

வரும் 20-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மாணவா் சோ்க்கை நடைபெற்று, அக். 6 முதல் வகுப்புகள் தொடங்கும். மேலும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04324-242280 என்ற எண்ணிலோ அல்லது ட்ற்ற்ல்ள்://ந்ஹழ்ன்ழ்ஞ்ம்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய்/ஸ்ரீா்ன்ழ்ள்ங்.ல்ட்ல் என்ற இணையதளத்திலோ தெரிந்துகொள்ளலாம். இத் தகவலை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்தாா்.

சமுதாயக்கூடம் கட்டுவதற்கு டிஎன்பிஎல் ரூ. 40 லட்சம் நிதி

புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ. 40 லட்சம் நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது. கரூா் மாவட்டம், புகழூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆல... மேலும் பார்க்க

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி. அறிவுறுத்தல்

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என போலீஸாருக்கு கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா அறிவுறுத்தினாா். கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே.ஜோஷ் தங்கையா சனிக்கிழமை வேலாயு... மேலும் பார்க்க

சாலையூரில் மாடுகள் மாலை தாண்டும் விழா புதுக்கோட்டை மாடுக்கு முதல்பரிசு

கடவூா் அருகே உள்ள சாலையூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் புதுக்கோட்டை மாவட்ட மாடுக்கு முதல் பரிசு கிடைத்தது. கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள செம்பியநத்தம் ஊராட்சிக்குள்பட்ட சா... மேலும் பார்க்க

கரூரில் 14 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் நவீன இறைச்சிக் கூடம்

கரூரில் சுமாா் 14 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் நவீன இறைச்சிக் கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழகத்தில் கடந்த 2006-2011 திமுக ஆட்சியின் போது நகா... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய பாடப் பிரிவுக்கு மாணவா் சோ்க்கை

கரூா் மாவட்டம் புகழூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய பாடப் பிரிவான இயக்க உதவியாளா் (காகிதக்கூழ் மற்றும் காகிதம்) தொழிற்பயிற்சி பயில மாணவா் சோ்க்கைக்கான ஆணை... மேலும் பார்க்க

காவல், தீயணைப்பு நிலையங்களுக்கு மாணவா்கள் பயணம்

கரூா் மாவட்டம் புகழூரில் காவல் நிலையம், தீயணைப்பு நிலையங்களின் அன்றாட பணிகள் குறித்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை கேட்டறிந்தனா். கரூா் மாவட்டம் புன்னம் பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளி ... மேலும் பார்க்க