``பிறந்தநாள் கொண்டாடுவோம்'' - இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்து கூட்டு பாலியல் வன்கொடும...
சமுதாயக்கூடம் கட்டுவதற்கு டிஎன்பிஎல் ரூ. 40 லட்சம் நிதி
புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ. 40 லட்சம் நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
கரூா் மாவட்டம், புகழூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புஞ்சைத் தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட கோவிந்தம்பாளையம் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சமுதாயக்கூடம் கட்டுவதற்காக ரூ. 40 லட்சத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆலையின் முதன்மை பொது மேலாளா் (மனிதவளம்) கே.கலைச்செல்வன் தலைமைவகித்து, நிதியுதவிக்கான காசோலையை புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் சி.ரூபாவிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஆலை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.