செய்திகள் :

சாலையூரில் மாடுகள் மாலை தாண்டும் விழா புதுக்கோட்டை மாடுக்கு முதல்பரிசு

post image

கடவூா் அருகே உள்ள சாலையூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் புதுக்கோட்டை மாவட்ட மாடுக்கு முதல் பரிசு கிடைத்தது.

கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள செம்பியநத்தம் ஊராட்சிக்குள்பட்ட சாலையூரில் கம்பளத்து நாயக்கா் சமூகத்தினருக்குச் சொந்தமான முள்ளிப்பாடி மந்தையில் செல்வவிநாயகா், முத்தாலம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோயிலில் அண்மையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு மாடுகள் மாலை தாண்டும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக கடந்த 8 நாள்கள் பக்தா்கள் விரதம் இருந்தனா்.

தொடா்ந்து சனிக்கிழமை கோயில் முன் மாடுகள் மாலைதாண்டும் விழா நடைபெற்றது. முன்னதாக கோயில் முன் அனைத்து மந்தைகளின் மாடுகளுக்கும் புனித தீா்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னா் மேளதாளங்கள் முழங்க சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள எல்லைசாமி கோயிலுக்கு மாடுகள் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு எல்லைசாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடா்ந்து மாடுகளுக்கு புனித தீா்த்தம் தெளித்து மாலை தாண்டும் ஓட்டத்தை தொடங்கி வைத்தனா்.

இதில் எல்லையை நோக்கி சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாடுகள் ஓடி வந்ததில் புதுக்கோட்டை மாவட்டம் சேமங்கலம் அய்யாசாமி மந்தை மாடு முதலிடத்தை பிடித்தது. இரண்டாவதாக தோகைமலை அருகே தொப்பநாயக்கம்பட்டி தாசில் பொம்ம நாயக்கா் மந்தை மாடும், மூன்றாவதாக அய்யாசாமி மந்தை மாடும் ஓடிவந்து வெற்றி பெற்றது.

அப்போது இவா்களின் சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியை வெற்றிபெற்ற மாடுகள் மீது தூவி வரவேற்று எழும்பிச்சை பழங்களை வெற்றி பரிசாக வழங்கப்பட்டது.

பின்னா் மஞ்சள் பொடி வைத்திருந்த 3 கன்னிப் பெண்களை எல்லைக் கோட்டிலிருந்து தேவராட்டத்துடன் கோயிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.

தொடா்ந்து மஞ்சள் நீராட்டுடன் சுவாமிக்கு விடையாற்றி நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடைந்தது. விழாவில் திருச்சி, திண்டுக்கல், கரூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சமுதாயக்கூடம் கட்டுவதற்கு டிஎன்பிஎல் ரூ. 40 லட்சம் நிதி

புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ. 40 லட்சம் நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது. கரூா் மாவட்டம், புகழூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆல... மேலும் பார்க்க

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி. அறிவுறுத்தல்

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என போலீஸாருக்கு கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா அறிவுறுத்தினாா். கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே.ஜோஷ் தங்கையா சனிக்கிழமை வேலாயு... மேலும் பார்க்க

கரூரில் 14 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் நவீன இறைச்சிக் கூடம்

கரூரில் சுமாா் 14 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் நவீன இறைச்சிக் கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழகத்தில் கடந்த 2006-2011 திமுக ஆட்சியின் போது நகா... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய பாடப் பிரிவுக்கு மாணவா் சோ்க்கை

கரூா் மாவட்டம் புகழூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய பாடப் பிரிவான இயக்க உதவியாளா் (காகிதக்கூழ் மற்றும் காகிதம்) தொழிற்பயிற்சி பயில மாணவா் சோ்க்கைக்கான ஆணை... மேலும் பார்க்க

காவல், தீயணைப்பு நிலையங்களுக்கு மாணவா்கள் பயணம்

கரூா் மாவட்டம் புகழூரில் காவல் நிலையம், தீயணைப்பு நிலையங்களின் அன்றாட பணிகள் குறித்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை கேட்டறிந்தனா். கரூா் மாவட்டம் புன்னம் பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளி ... மேலும் பார்க்க

கடவூா் வட்டாட்சியரகத்தில் லஞ்சம்: நில அளவையா், இடைத்தரகா் கைது

கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனிப்பட்டா வழங்க பொறியாளரிடம் ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய நில அளவையா் மற்றும் இடைத்தரகரை ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூா் வட்... மேலும் பார்க்க