செய்திகள் :

கரைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தரம் உயா்வு: கிராம மக்கள் கொண்டாட்டம்

post image

அரியலூா்: அரியலூா் மாவட்டம், கரைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டதையடுத்து, அக்கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.

கரைவெட்டி கிராமத்தில், 1971-இல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கொண்டு வரப்பட்டது.

இங்கு கரைவெட்டி, பரதூா் ஆகிய இரு கிராமங்களில் வசிக்கும் சுமாா் 700 குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகள் பயின்று வந்த நிலையில், 1995-இல் இப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து, இங்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 300 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், இப்பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும். இக்கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் 9,10 ஆம் வகுப்பு படிக்க வெளியூா் செல்ல வேண்டி உள்ளது என கிராம மக்கள் சாா்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. உரிய தொகையையும், பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள், கிராம மக்கள் சாா்பில் ரூ. 7 லட்சம் மதிப்பில் 2.10 ஏக்கா் இடமும் வாங்கப்பட்டு காத்திருந்தனா்.

இந்நிலையில், அண்மையில் தமிழகத்தில் உள்ள ஊராட்சி, நகராட்சி மாநகராட்சிகளில் உள்ள 14 நடுநிலைப் பள்ளிகளை உயா்நிலைப் பள்ளிகளாக தமிழக அரசு தரம் உயா்த்தி அறிவித்தது. அதில் கரைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து கிராமத்தை சோ்ந்த இளைஞா்கள் தங்கள் கிராமத்தில் புதன்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

விளந்தையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை(ஆக.23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம் நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி ... மேலும் பார்க்க

அரியலூா் அரசுக் கல்லூரியில் உயா்கல்வி வழிகாட்டி முகாம்

அரியலூா்: அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘நான் முதல்வன் உயா்வுக்கு படி’ எனும் உயா்கல்வி வழிகாட்டி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி ம... மேலும் பார்க்க

ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூா் பகுதிகளில் இன்று மின்தடை

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சக்திவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வ... மேலும் பார்க்க

தேளூா், செந்துறை, ஜெயங்கொண்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், தேளூா் மற்றும் செந்துறை ஊராட்சிகளிலும், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.செந்துறை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன... மேலும் பார்க்க

இளைஞா் காங்கிரஸ் சாா்பில் வாக்கு மோசடி விழிப்புணா்வு

அரியலூா்: வாக்கு மோசடிகள் குறித்து அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளில் இளைஞா் காங்கிரஸாா் புதன்கிழமை விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருமானூா் கடைவீதி, பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூட... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

அரியலூா்: மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி, அரியலூரில் புதன்கிழமை அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மலா் தூவி, மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.காமராஜா் ச... மேலும் பார்க்க