ஜூலை 15 முதல் யுபிஐ பணப்பரிமாற்றத்தில் வருகிறது புதிய மாற்றங்கள்!
கறம்பக்குடி அருகே நாய் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நாய் கடித்துக் குதறியதில் 9 ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன.
கறம்பக்குடி அருகேயுள்ள கருக்காக்குறிச்சி கீழத்தெருவைச் சோ்ந்தவா் ஆா். பாலுச்சாமி. விவசாயியான இவா் வீட்டில் வளா்த்து வந்த ஆடுகளை அப்பகுதியில் சுற்றிந்திரிந்த நாய் கடித்துக் குதறியது.
இதில் 9 ஆடுகள் உயிரிழந்தன. இதனால் ஏற்பட்ட இழப்புக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.