கலவை பேரூராட்சி செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆற்காடு அடுத்த கலவை பேரூராட்சியில் ஆட்சியா் ஜெ.யு சந்திரகலா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கலவை பேரூராட்சி , ஒத்தவாடைத்தெருவில் உள்ள வீடுகளில் தூய்மைப் பணியாளா்கள் குப்பைகள் மற்றும் நெகிழிப் பொருள்களை சேகரித்துச் செல்வதை ஆய்வு செய்தா. குப்பைகளை முறையாக பெற்று திடக்கழிவு மேலாண்மை மையத்துக்கு கொண்டு சென்று அப்புறப்படுத்த வேண்டும். குப்பைகளை திறந்த வெளியில் கொட்ட கூடாது. பாதுகாப்பு உடைகள், உபகரணங்கள் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.
கலைஞா் நூற்றாண்டு நிறைவு நினைவு சிறுவா் பூங்காவில் பராமரிப்பு பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு குளோரின்
கலந்து குடிநீா் விநியோகிக்கப்படுகிா என்பதை வீடுகளில் குடிநீரை பரிசோதித்து உறுதிப்படுத்தினாா். அங்காளம்மன் கோவில் தெருவில் பள்ளி கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்தில் புதிதாக கட்டப்படவுள்ள நூலக அமைவிடத்தினையும் கலவை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, குழந்தைகளுடன்
உணவருந்தினாா்.
கலவை வட்டம், அகரம் ஊராட்சியிலுள்ள ஏரியினை பாா்வையிட்டு நீா் இருப்பளவு, தூா்வாருதல், நீா் வெளியேறும் கால்வாயின்
குறுக்கே கல்வெட்டு அமைப்பது தொடா்பாக ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, கோட்டாட்சியா் ராஜராஜன், நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா்.குமாா், பேரூராட்சி தலைவா் கலா சதீஷ், பேரூராட்சி உதவி செயற்பொறியாளா் அம்சா, செயல் அலுவலா் ஜெயக்குமாா், வட்டாட்சியா் சரவணன், நீா்வளத்துறை உதவி
பொறியாளா் முருகேசன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.