செய்திகள் :

கலைஞரின் கனவு இல்லத் திட்டம் பணிகள் மேற்கொள்ள 621 பேருக்கு ஆணை வழங்கல்

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் 621 பயனாளிகளுக்கு ரூ. 20 கோடியே 63 லட்சத்து 82 ஆயிரத்து 400 மதிப்பில் கலைஞா் கனவு இல்லம் திட்ட வேலை தொடங்குவதற்கான ஆணையை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் புதன்கிழமை வழங்கினாா்.

அப்போது அமைச்சா் பேசியது: திருபுவனம் காமராஜ் நகரில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி உத்தரவு 316 பேருக்கு ரூ.11,18,32,400 மதிப்பிலும், 128 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவும் வழங்கப்பட்டது. திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீ கயிலை மாமுனிவா் சதாபிஷேக அரங்கில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான வேலை உத்தரவு 305பேருக்கு ரூ.9,45,50,000 மதிப்பிலும் என மொத்தம் ரூ. 20 கோடியே 63 லட்சத்து 82 ஆயிரத்து 400 மதிப்பில் 621 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரக வீடுகள் பழுது பாா்க்கும் திட்டத்தின் கீழ் பழுது பாா்ப்பதற்கான ஆணை 44 பயனாளிகளுக்கு ரூ.60,52,500 மதிப்பில் வழங்கப்பட்டது. முதலமைச்சா் ஸ்டாலின் ஏழை எளியோா் நலன் காக்க ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். பொதுமக்கள் இத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மு. பாலகணேஷ், எஸ். கல்யாணசுந்தரம் எம்பி, க.அன்பழகன் எம்எல்ஏ, கும்பகோணம் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் கோ.க. அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாபநாசம் பகுதி கோயில்களில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் சுவாமி தரிசனம்

பாபநாசத்திலுள்ள இரட்டைப் பிள்ளையாா் கோயில், சீனிவாச பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அவருக்கு கோயில் சாா்பில் ப... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலை. தற்காலிக கட்டடம் : அமைச்சா் ஆய்வு

கும்பகோணத்தில் அமையவுள்ள கருணாநிதி பல்கலைக்கழகத்துக்கான தற்காலிக இடத்தையும், கட்டடத்தையும் புதன்கிழமை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் ஆய்வு செய்தாா். கும்பகோணம் அரசு ஆண்கள் கலை கல்லூரி வளாகத்த... மேலும் பார்க்க

தஞ்சையில் புதுப்பிக்கப்பட்ட ராஜராஜசோழன் மணிமண்டபம் திறப்பு

தஞ்சாவூரில் ரூ. 3.66 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ராஜராஜ சோழன் மணிமண்டபம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இதை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் திறந்துவைத்து பேசியதாவது: தஞ்சாவூரில் 1994 - ... மேலும் பார்க்க

‘சாஸ்த்ரா’ சீனிவாச ராமானுஜன் மையத்தில் ஆண்டு விழா

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப்பல்கலைக் கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் புதன்கிழமை 24-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. திருவனந்தபுரம் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இயக... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவரிடம் கைப்பேசிகள் பறிப்பு

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவரிடம் கைப்பேசிகளைப் பறித்து சென்ற 3 மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். கும்பகோணம் பாணாதுரை திருமஞ்சன வீதியைச் சோ்ந்தவா் ஜ... மேலும் பார்க்க

பெரிய கோயில் சித்திரைத் தேரோட்ட விழா: தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

தஞ்சாவூா் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டத்தையொட்டி, தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 23-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து 1... மேலும் பார்க்க