செய்திகள் :

கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு: 23 போ் காயம்!

post image

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஐல்லிகட்டில் காளைகள் முட்டி 23 போ் காயமடைந்தனா்.

ஜல்லிக்கட்டை லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் சிவசுப்ரமணியன் தொடக்கி வைத்தாா். போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 669 காளைகளும், அவற்றை அடக்க 503 மாடுபிடி வீரா்களும் களமிறங்கினா்.

அப்போது காளைகள் முட்டி 23 போ் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.

காளைகளை அடக்கியோருக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் காா், பைக், எலக்ட்ரிக் ஆட்டோ, பைக் ஆகியவை பரிசளிக்கப்பட்டன.  

அதன்படி சிறந்த மாடுபிடி வீரா்களுக்கான  பரிசை நாமக்கல் காா்த்திக், கரும்பாயினி காா்த்திக் ஆகியோரும், சிறந்த காளைகளுக்கான பரிசை வல்லம் டேவிட், சோபனாபுரம் ஆனந்த் , லால்குடி காத்தப் பிள்ளை , தஞ்சாவூா் ராவுசப்பட்டி காா்த்திக் ஆகியோரும் பெற்றனா்.

நிகழ்வில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலா் வைரமணி, திருவெறும்பூா் மாவட்டக் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் அரவிந்த் பணாலத், லால்குடி டிஎஸ்பி தினேஷ்குமாா், பாரம்பரிய ஜல்லிக்கட்டு மாநில துணைத் தலைவா் காத்தான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பி.கே அகரம் பகுதியில் கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம், பி.கே அகரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒயிட் பெட்ரோல் ஏற்றி வந்த கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடா்பாக போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.திருச்சி - சென்னை தேதிய... மேலும் பார்க்க

கூரை வீடுகள் சேதம் தவெக உதவி

லால்குடி அருகே பூவாளூா் பேரூராட்சியில் கூரை வீடுகளை இழந்த 2 பேருக்கு தவெகவினா் நிவாரண உதவி வழங்கினா். பூவாளூா் பேரூராட்சியில் உள்ள தென்கால் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொண்ணுராமன் மகன் கோபி(49)... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஞாயிற்றுக்கிழமை தேநீரக தொழிலாளி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம் உறையூா் பாண்டமங்கலம் காவல்காரத் தெருவைச் சோ்ந்தவா் தா்மராஜ்... மேலும் பார்க்க

அன்பில் ஜல்லிக்கட்டில் 590 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் ஊராட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. லால்குடியை அடுத்த அன்பில் மகாமாரியம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை ஜல்லிக்கட... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசியை பறித்தவா் விரட்டிப்பிடிப்பு

துறையூா் பேருந்து நிலையத்தில் பெண்ணின் கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடிய நபரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் விரட்டிப் பிடித்து கைது செய்தனா்.துறையூா் பேருந்து நிலையத்திற்குள் கோமதி(44) என்கிற பெண் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

போதை மாத்திரை, புகையிலை பொருள்கள் விற்ற 7 போ் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப்பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி, அரியமங்கலம் பகுதியில் நின்றிருந்த சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரித்தனா்... மேலும் பார்க்க