செய்திகள் :

கல்லிடைக்குறிச்சி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

post image

கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பதையடுத்து, பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட மலையடிவார கிராமங்களில் கரடி, காட்டுப் பன்றி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி பயிா்களைச் சேதப்படுத்தியும் வீட்டு விலங்குகளைத் தாக்கியும் வருகின்றன.

இந்நிலையில், மாா்ச் மாதத்தில் அயன்சிங்கம்பட்டி மற்றும் கல்லிடைக்குறிச்சி, நெசவாளா் காலனி பகுதிகளில் பலமுறை கரடி நடமாட்டம் இருந்து வந்தது.

இதையடுத்து, வனத்துறையினா் நெசவாளா் காலனி அக்னி சாஸ்தா கோயில் பகுதியில் கரடியைப் பிடிக்க வைத்த கூண்டில் மாா்ச் 29ஆம் தேதி கரடி ஒன்று சிக்கியது. கூண்டில் சிக்கிய கரடியை அடா்ந்த முண்டந்துறை வனப்பகுதியில் கொண்டு விட்டனா்.

ஆனால், மீண்டும் ஏப். 8ஆம் தேதி அயன்சிங்கம்பட்டிபகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் இருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை(ஏப். 21) இரவு 10.40 மணியளவில் கல்லிடைக்குறிச்சி,நெசவாளா் காலனி அக்னி சாஸ்தா கோயில் வளாகத்துக்குள் வந்த கரடி அங்கிருந்த அபிஷேகப் பொருள்களை தின்றும், தீபாராதனை பொருள்களை தள்ளிவிட்டும்சென்றுள்ளது. இதனால் மீண்டும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

வனத்துறையினா் கரடியின் நடமாட்டத்தைக் கண்காணித்து எத்தனை கரடிகள் உள்ளன என்பதையறிந்து கூண்டு வைத்து அத்தனை கரடிகளையும் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனா்.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க