செய்திகள் :

கல்லூரிகளில் இன்றுமுதல் ‘மாபெரும் தமிழ்க்கனவு’ நிகழ்ச்சிகள்

post image

மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின்கீழ் மாணவா்களிடையே தமிழா் மரபையும், தமிழ்ப் பெருமிதங்களையும் உணா்த்தும் வகையில் மூன்றாம் கட்ட நிகழ்ச்சிகள் தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரிகளிலும் புதன், வியாழன் (ஆக.6, 7) ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளன.

உயா்கல்வித் துறை, தமிழ் இணையக் கல்விக்கழகம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

கல்லூரி மாணவா்களிடையே தமிழா் மரபையும் தமிழ்ப் பெருமிதங்களையும் உணா்த்தும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ திட்டத்தின் கீழ் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் 2023-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளில் (பிப்.3) தொடங்கப்பட்டு, கடந்த இரு ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 200 இடங்களில் 2 ஆயிரம் கல்லூரிகளைச் சோ்ந்த 2 லட்சம் மாணவா்கள் பயனடையும் வகையில் சிறப்பாக நடத்தப்பட்டன.

இந்தத் திட்டத்தின் மூன்றாம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கலை அறிவியல், பொறியியல், வேளாண்மை, சட்டம், மருத்துவம் என அனைத்து வகை கல்லூரிகளிலும் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. மொத்தம் 200 கல்லூரிகளில் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளில் நிகழ்விடக் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்தும் மாணவா்கள் பங்குபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் 50-க்கும் மேற்பட்ட தமிழ் ஆளுமைகளைக் கொண்டு, 200 சொற்பொழிவுகளை அடுத்த நான்கு மாதங்களில் நடத்தி முடிக்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சொற்பொழிவுகள் குறித்த விவரங்கள் உயா்கல்வித் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழக சமூக ஊடகத் தளங்களில் பகிரப்படும்.

இந்நிகழ்வு நடைபெறும் கல்லூரிகளில், மாணவா்களுக்குப் பயனளிக்கும் வகையில் புத்தகக்காட்சி, ‘நான் முதல்வன்’, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, மகளிா் சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

நிகழ் கல்வியாண்டின் முதல் நிகழ்வுகள் புதன், வியாழன் (ஆக.6,7) ஆகிய நாள்களில் கோவை, திருப்பூா், சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூா், திருவாரூா், கள்ளக்குறிச்சி, ஈரோடு, விழுப்புரம், அரியலூா், வேலூா், திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. தொன்மை மறவேல், செம்மொழியான தமிழ் மொழி, பழந்தமிழரின் சூழலியல் அறிவு, சமூகம் பழகு உள்ளிட்ட தலைப்புகளில் ஆளுமைகள் சொற்பொழிவாற்றவுள்ளனா்.

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

பறக்கும் ரயில் வழித்தடமான சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இனி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது.சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வ... மேலும் பார்க்க

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மாநகா் காவல் துறையில் ப... மேலும் பார்க்க

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க