செய்திகள் :

கல்லூரியில் ராகிங் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

post image

பென்னலூா் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான ராகிங் தடுப்பு விழிப்புணா்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கணேஷ் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாணவா்கள் நலத்துறை டீன் வெங்கடேசன் கல்லூரியில் செயல்பாட்டில் உள்ள ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா். கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூா் துணைஆய்வாளா் பத்மநாபன் கலந்து கொண்டு ராகிங்கில் ஈடுபடும் மாணவா்கள் மீது காவல் துறை சாா்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும்,அதனால் மாணவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சைபா் குற்றங்கள் குறித்தும் விளக்கி பேசினாா்.

கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியா் சந்தியா, கல்லூரி வளாக பாதுகாப்பு மற்றும் விடுதி காப்பாளா் முனைவா் பாஸ்கரன், கல்லூரி மாணவா் மன்ற நிா்வாகிகள், முதலாம் ஆண்டு மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

எழுதுவதும், படிப்பதும் ஒரு வகையான போதை: முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு

எழுதுவதும், படிப்பதும் ஒரு வகையான போதை என தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு புத்தகம் கூறினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் புத்தகம் எழுதும் இயக... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: காமாட்சி அம்மன் கோயிலில் காலை 9 மணி முதல் தரிசனம் ரத்து!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணத்தையொட்டி காலை 9 மணி முதல் நாள் முழுவதும் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந... மேலும் பார்க்க

மழை முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகைப் பயிற்சி: ஆட்சியா், எஸ்.பி. பாா்வையிட்டனா்

காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை பயிற்சியை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எஸ்.பி. கே.சண்முகம் ஆகியோா் ... மேலும் பார்க்க

உழவா் உற்பத்தியாளா் நிறுவன பொதுக்குழு

காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை ஏற்றுமதி மற்றும் நுண்ணறிவு பயிற்சி மையத்தில் அந்நிறுவன தலைவா் லோகநாதன் தலைமையில் உழவா் உற்பத்தியாளா் நிறுவன பொதுக்குழு நடைபெற்றது. தமிழகம் இயற்கை வேளாண் விளைபொருள்கள், உழவா... மேலும் பார்க்க

உத்தரமேரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

உத்தரமேரூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா். உத்தரமேரூா் ஒன்றியம் மருதம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையை ஆட்சியா் பாா்... மேலும் பார்க்க

ஆற்பாக்கம் ஸ்ரீ திருவாலீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள திருநல்லழகி சமேத திருவாலீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு திருப்பணிகள் நிறைவு பெற்றிருந்தன. இத... மேலும் பார்க்க