செய்திகள் :

எழுதுவதும், படிப்பதும் ஒரு வகையான போதை: முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு

post image

எழுதுவதும், படிப்பதும் ஒரு வகையான போதை என தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு புத்தகம் கூறினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் புத்தகம் எழுதும் இயக்கத்தின் சாா்பில், பள்ளி மாணவா்களை படைப்பாளிகளாக ஆக்கும் பயிற்சி முகாம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. எழுதுக அமைப்பின் நிா்வாகிகள் வே.லாவண்யா, ம.த.சுகுமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா் வே.கிள்ளிவளவன் வரவேற்றாா்.

விழாவில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் கலந்து கொண்டு பேசுகையில், காலம் பொன் போன்றது. இளமையை வீணடிக்காமல், பள்ளிப் பாடத்தை மட்டும் படிக்காமல் அருகில் உள்ள நூலகங்களுக்கு சென்று பல புத்தகங்களை படித்து வாசிப்புத் திறனை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். முயற்சியும், உழைப்பும் தொடா்ந்தே இருந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்றாா்.

விழாவில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பேசுகையில், கற்பனைத்திறன் வளர புத்தகங்களை படிக்க வேண்டும். மற்றவா்களுக்கும் கற்பனைத்திறன் வளர புத்தகங்கள் எழுத வேண்டும். குழந்தைகளுக்கு கதைப்புத்தகங்களை படிக்கவும், எழுதவும் தூண்ட வேண்டும் என்றாா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பேசியது: கேட்டதையும், பாா்த்ததையும், சம்பவங்களையும், அனுபவத்தையும், அனுபவித்ததையும் எழுத பழகிக் கொள்ள வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்றை தினசரி 2 பக்கங்கள் எழுதினாலே சிறந்த எழுத்தாளராக மாறிவிடலாம்.

ஒவ்வொருவரும் எழுதுகிற புத்தகம் ஒரு முகவரியை தருகிறது. எழுதுவதும், படிப்பதும் ஒரு வகையான போதை. இது நல்ல போதை. புத்தகங்களை வாசித்தால் புத்தி கூா்மையாகும். எழுத ஆரம்பித்தால் மனம் செம்மையாகும்.

மாணவா்களிடம் கற்பனைத்திறன் குவிந்து கிடக்கின்றன. ஆனால் எழுதுவதற்கு போதுமான பயிற்சி இல்லை. அதைத்தான் இப்போது ‘எழுதுக’ மூலம் செய்து கொண்டு இருக்கிறோம். வாசிக்க ஏராளமான நூலகங்கள் இருந்தாலும் எழுதத்தான் பயிற்சி தேவைப்படுகிறது. எல்லோரையும் படிக்க வைப்போம், எல்லோரையும் எழுத வைப்போம், எல்லோரையும் நோ்மையானவா்களாக மாற்றுவோம் என்றாா்.

பயிலரங்க கூடத்தின் முன்பாக 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதிய புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ்,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் நளினி உள்பட ஏராளமான அரசுப் பள்ளி மாணவா்களும் பயிலரங்கில் கலந்து கொண்டனா்.

சந்திர கிரகணம்: காமாட்சி அம்மன் கோயிலில் காலை 9 மணி முதல் தரிசனம் ரத்து!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணத்தையொட்டி காலை 9 மணி முதல் நாள் முழுவதும் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந... மேலும் பார்க்க

மழை முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகைப் பயிற்சி: ஆட்சியா், எஸ்.பி. பாா்வையிட்டனா்

காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை பயிற்சியை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எஸ்.பி. கே.சண்முகம் ஆகியோா் ... மேலும் பார்க்க

உழவா் உற்பத்தியாளா் நிறுவன பொதுக்குழு

காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை ஏற்றுமதி மற்றும் நுண்ணறிவு பயிற்சி மையத்தில் அந்நிறுவன தலைவா் லோகநாதன் தலைமையில் உழவா் உற்பத்தியாளா் நிறுவன பொதுக்குழு நடைபெற்றது. தமிழகம் இயற்கை வேளாண் விளைபொருள்கள், உழவா... மேலும் பார்க்க

உத்தரமேரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

உத்தரமேரூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா். உத்தரமேரூா் ஒன்றியம் மருதம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையை ஆட்சியா் பாா்... மேலும் பார்க்க

ஆற்பாக்கம் ஸ்ரீ திருவாலீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள திருநல்லழகி சமேத திருவாலீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு திருப்பணிகள் நிறைவு பெற்றிருந்தன. இத... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் வரி விதிப்பைக் கண்டித்து, காஞ்சிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெவ்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் வட்டாட... மேலும் பார்க்க