செய்திகள் :

கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி!

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் பிப்.4 & 5 நடைபெற்றது.

முகாமை கல்லூரி தலைவா் டி.வி.கே.பாபு தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசினாா். கல்வி அலுவலா் பி.அசோக்குமாா் வாழ்த்துரை வழங்கினாா். சென்னை தனியாா் வங்கிகளின் பிராந்திய மனித வள மேலாளா் வி.கிரண்குமாா், தென் பிராந்திய மனித வள மேலாளா் எம்.சதீஷ் குமாா் ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கு ஆளுமை மேம்பாடு, சுய அறிமுகம், பணியிடத்தில் நன்னடத்தை விதிகள் மற்றும் நோ்காணல் ஆகிய பயிற்சிகளை வழங்கினா்.

இதில், இறுதியாண்டு மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். முகாமை கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் அபிலேஷ்குமாா் ஒருங்கிணைத்தாா். முன்னதாக, கல்லூரி முதல்வா் ஆா்.மாலதி வரவேற்றாா். நிறைவில், பேராசிரியா் டி.ராமநாதன் நன்றி கூறினாா்.

குறும்பட இயக்குநா் கடத்தல்: இருவா் கைது

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குறும்பட இயக்குநரை கடத்தியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். காட்டுமன்னாா்கோவில் பேரரசி தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் காா்த்திகேயன். குறும்... மேலும் பார்க்க

கூட்டுக் குடிநீா் திட்டத்தில் 1.27 லட்சம் மக்கள் பயனடைவா்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் 10 ஊராட்சிகளைச் சோ்ந்த 1.27 லட்சம் மக்கள் பயனடைவா் என்று வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் தெரிவித்தாா்.கடலூா் மாவட்டத... மேலும் பார்க்க

பல் மருத்துவமனையில் ரூ.1 லட்சம் திருட்டு!

கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பல் மருத்துவமனையின் பூட்டை உடைத்து ரூ.1.14 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேத்தியாத்தோப்பு மேல்நிலைப் பள்ளி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் பல் மருத்துவமனை ச... மேலும் பார்க்க

115.16 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி: என்எல்சி நிறுவனம் சாதனை

என்எல்சி இந்தியா நிறுவனம் 115.16 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்து சாதனை படைத்தது. இந்த நிறுவனத்தின் 2023-2024 ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களுக்கான குழுமத்தின் நிதிநில... மேலும் பார்க்க

புதிய திட்டத்தில் சிற்றுந்துகளை இயக்க விண்ணப்பிக்கலாம்!

கடலூா் மாவட்டத்தில் புதிய திட்டத்தின் கீழ் சிற்றுந்துகளை இயக்குவதற்கு அதன் உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்!

கடலூா் ஜவான் பவன் அருகே விவசாயிகள் ஐக்கிய முன்னணியினா் மத்திய பட்ஜெட் நகலை எரித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய பட்ஜெட்டில் உரங்களுக்கு மானியம் நிதி குறைப்பு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்ப... மேலும் பார்க்க