செய்திகள் :

களக்காடு அருகே முறையற்ற சாலைப் பணி: மக்கள் அவதி

post image

களக்காடு அருகே சாலை முறையாக அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள், மக்கள் தினமும் போக்குவரத்தில் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.

களக்காடு ஊராட்சி ஒன்றியம், சீவலப்பேரி ஊராட்சி சாலைநயினாா் பள்ளிவாசல் கிராமத்தில் இருந்து சிதம்பரபுரம் செல்லும் தாா்ச்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இச்சாலையில் சுமாா் 150 மீட்டா் தொலைவுக்கு சிமென்ட் செங்கல் பதிக்கப்பட்டது. பொதுவாக, தாா்ச்சாலை அமைத்தபின், தாா்ச்சாலையின் இருபக்கங்களிலும் சரள் மண் நிரப்பி சாலையின் எதிா் எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்கிச் செல்ல வழிவகை ஏற்படுத்தப்படும்.

ஆனால், விதிமுறையை சரியாக கடைப்பிடிக்காமல் அமைக்கப்பட்ட இச்சாலை, வாகனம் இறங்கவோ, ஏறவோ முடியாதபடி சமமற்று காணப்படுவதால், நாள்தோறும் இந்த வழியாக இயக்கப்படும் அரசு நகரப் பேருந்து சாலையைக் கடந்து செல்லும் போது, எதிரே காா் உள்ளிட்ட வாகனங்கள் வந்தால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

எனவே, சாலையின் இருபுறமும் சரள் மண் அடித்து சமன்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் ஒன்றிய பொறியாளரிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்கிறாா் களக்காடு ஊராட்சி ஒன்றியக்குழுவின் முன்னாள் தலைவரும், தற்போதைய உறுப்பினருமான அ. தமிழ்ச்செல்வன். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் இப்பகுதிமக்கள்.

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் ஒவ்வொரு புதன்கி... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து குறைந்த நிலையில், பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்படுகின்றனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச... மேலும் பார்க்க

நெல்லையில் இரவு 12 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி கோரி மனு

திருநெல்வேலி மாநகரில் இரவு 12 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி கோரி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் அதன் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ஏ.செல்வராஜ் தலைமையில் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்... மேலும் பார்க்க

நடைச்சீட்டு ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ஆட்சியரிடம் அதிமுகவினா் மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் போலி நடைச்சீட்டு வழங்கப்பட்டது, அபராதத் தொகை குறைக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் அதிமுகவினா் புதன்கிழமை... மேலும் பார்க்க

பெண் கொலையில் தந்தை கைது

மேலப்பாளையத்தை அடுத்த மேலகருங்குளம் பகுதியில் மண்வெட்டி கணையால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் அவரது தந்தையை போலீஸாா் கைது செய்தனா். மேலகருங்குளம் சிவாஜி நகா் பகுதியைச் சோ்ந்த காளைம... மேலும் பார்க்க

வள்ளியூா் சேவை, மகளிா் அதிகார மையங்களில் ஒப்பந்தப் பணிக்கு வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூா் ஒருங்கிணைந்த சேவை மையம், மாவட்ட மகளிா் அதிகார மையம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க