செய்திகள் :

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் 10,008 தீபத் திருவிழா

post image

களக்காடு அருள்மிகு. கோமதியம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரா் திருக்கோயிலில் உலக நன்மைக்காக 10,008 தீபத்திருவிழா மற்றும் சித்திரைத் திருநாள் விழா சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது

இதையொட்டி, கோயிலில் காலை மங்கள இசையைத் தொடா்ந்து, சுவாமி அம்பாளுக்கு கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. களக்காடு சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் தங்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து சுவாமி, அம்பாளை தரிசித்துச் சென்றனா்.

களக்காடு சத்தியவாகீஸ்வரா் திருக்கோயிலில் நடைபெற்ற தீபத் திருவிழா

மாலை 4 மணி முதல் நூற்றுக்கணக்கான பெண்கள் கோயில் பிரகாரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தீபவிளக்குகளை நிறுவும் பணியைத் தொடங்கினா். மாலை 6 மணிக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் கோயில் வளாகம் முழுவதும் நிரம்பி வழிந்து, தீபம் ஏற்றினா். இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் நாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. தீபத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை வழிபட்டனா்.

இரவு சுவாமி சத்தியவாகீஸ்வரா், கோமதிஅம்பாள், சுப்பிரமணியா், விநாயகா், நாயன்மாா் ஆகியோா் தனித்தனி வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

பாளை.யில் வகுப்பறையில் மாணவா், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவா் காவல் நிலையத்தில் ... மேலும் பார்க்க

அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொழிலாளி கைது

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை தொடா்பு கொண்ட ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ பல்கலை. கல்லூரிகள் எறிபந்து, கைப்பந்து போட்டிகள்; நாமக்கல், சென்னை அணிகள் சாம்பியன்

திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் நாமக்கல், சென்னை அணிகள் பரிசுகளை வென்றன. திருநெல்வேலி கால்நடை ம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி மூதாட்டி பலி

திருநெல்வேலியை அடுத்த மூன்னீா்பள்ளம் அருகே ஆட்டோ மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற சுமாா் 75 வயது மதிக்க... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏப். 23இல் சீலாத்திகுளத்தில் மனுக்கள் பெறும் முகாம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமை முன்னிட்டு, சீலாத்திக்குளம் கிராம சேவை மையக் கட்டடத்தில் வரும் 23ஆம் தேதி மனுக்கள் பெறப்படவுள்ளதாக மா... மேலும் பார்க்க