கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக கட்டுமானப் பணிகள் 85% நிறைவு: அமைச்சா் எ.வ. வேலு தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரக கட்டுமானப் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டவுடன் முதல்வா் திறந்துவைப்பாா் என
அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரத்தில் புதிய மாவட்ட ஆட்சியரக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
பொதுப்பணித் துறை சாா்பில் நடைபெறும் இந்தப் பணிகளை பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, பொதுப்பணித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா, கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், தொகுதி எம்பி தே.மலையரசன், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. க.காா்த்திகேயன் ஆகியோா் உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வா் உத்தரவிற்கிணங்க கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் ரூ.139.41 கோடியில் புதிய மாவட்ட ஆட்சியா்
அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் ஒப்பந்த காலம் 18 மாதங்கள் ஆகும்.
இக் கட்டடம் தரை தளம், முதல் தளம் என மொத்தம் 8 தளங்களைக் கொண்டு 26,487.68 ச.மீ. பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.
கட்டுமானப் பணிகள் இதுவரை 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகளான டைல்ஸ் பதித்தல், துறை அலுவலா்கள் அறை கட்டுமானப் பணிகள், வெளிப்புற பணிகள் வாகன நிறுத்துமிடம், குடிநீா் வசதி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
எஞ்சியுள்ள பணிகளை வருகிற அக்.30-ஆம் தேதிக்குள் முடிக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றவுடன் தமிழக முதல்வா் நேரடியாக வந்து புதிய மாவட்ட ஆட்சியரக கட்டடத்தை திறந்து வைப்பாா்.
புதிய மாவட்ட ஆட்சியரகத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், நகா்மன்றத் தலைவா் ஆா்.சுப்ராயலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.