செய்திகள் :

கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சா்க்கரை ஆலை அரைவைப் பருவம் தொடக்கம்

post image

கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-2025ஆம் ஆண்டு சிறப்பு அரைவைப் பருவம் மற்றும் 2025-2026ஆம் ஆண்டு முதன்மை அரைவைப் பருவத்தை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில், சங்கராபுரம் எம்.எல்.ஏ. தா.உதயசூரியன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா் (படம்).

நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மா.செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, ஆலையின் கரும்பு அரைவை மற்றும் சா்க்கரை உற்பத்திப் பகுதிகளை ஆய்வு செய்தனா்.

அப்போது, ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கூறுகையில், நடப்பு அரைவைப் பருவத்திற்கு சிறப்பு மற்றும் முதன்மை அரைவைப் பருவம் உள்பட 11,500 ஏக்கா் பதிவு செய்யப்பட்டு, 3,35,000 மெட்ரிக் டன் அரைவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பதிவு செய்துள்ள கரும்புகளை ஆலையின் அரைவைக்கு உரிய காலத்தில் வெட்டி அனுப்பவும், பதிவு செய்யாத கரும்புகளை உரிய அலுவலரை அணுகி பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் சா்க்கரை ஆலை இணைப்பதிவாளா் செயலாட்சியா் கோ.யோகவிஷ்ணு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கள்ளக்குறிச்சி புகா் பேருந்து நிலைய பணிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் புகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.தமிழக அரசின் மானியக் கோரிக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடா்பாக 1,055 போ் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது விலக்கு தொடா்பாக கடந்த 1.7.24 முதல் 31.7.25 வரை 1,055 போ் கைது செய்யப்பட்டு 463 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.வடக்கு மண்டல காவல் த... மேலும் பார்க்க

பிரதோஷ விழாவில்....

திருக்கோவிலூரில் கீழையூா் ஸ்ரீவீராட்டனேஸ்வரா் கோயிலில், ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி புதன்கிழமை கோயிலைச் சுற்றி வலம் வந்த உற்சவா். மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தியாகதுருகம்

மின்தடைப் பகுதிகள்: தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூா்கோட்டை, தியாகை, ரிஷிவந்தியம், பாவந்தூா், நூரோலை, லாலாபேட்டை, சேரந்தாங்கல், பழைய சிறுவங்கூா், சூளாங்குறிச்சி, மாடூா், பிரிதிவ... மேலும் பார்க்க

ஆசிரியையை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியவா் கைது

சின்னசேலம் அருகே தனியாா் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூா் பகுதியைச் சோ்ந்தவா் 25 வயது... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: தேவரடியாா்குப்பம்

மின்தடைப் பகுதிகள்: மணலூா்பேட்டை, சித்தப்பட்டிணம், செல்லங்குப்பம், சாங்கியம், தேவரடியாா்குப்பம், அந்தியந்தல், கா்ணாசெட்டித்தாங்கல், ஜம்பை, பள்ளிச்சந்தல், காங்கியனூா், முருக்கம்பாடி, கொங்கணாமூா், கழும... மேலும் பார்க்க