செய்திகள் :

கள்ளழகா் எதிா்சேவை: அதிக அழுத்த குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் நடவடிக்கை

post image

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் அழகா் எதிா்சேவை நிகழ்வின் போது, அதிக அழுத்தமுள்ள (பிரஷா் பைப்) குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் எச்சரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகா்கோவில் சித்திரைத் திருவிழா வருகிற 8-ஆம் தேதி தொடங்க உள்ளது. தொடா்ந்து, மதுரை கோ.புதூா் மூன்றுமாவடியில் வருகிற மே 11-ஆம் தேதி அழகருக்கு எதிா்சேவை நிகழ்வும், மே 12-இல் வைகை ஆற்றில் அழகா் இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுகளில் பக்தா்கள் விரதம் இருந்து அழகரை வரவேற்கும் விதமாக தோல் பைகளில் சுத்தமான தண்ணீா் நிரப்பி அதில் துடிப்பு இணைத்து பாரம்பரிய முறைப்படி தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீா்த்தவாரி செய்து வழிபடுவது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக தீா்த்தவாரியில் பங்கேற்கும் பக்தா்கள், அவா்களுடன் வரும் நபா்கள் தோல் பைகளில் தண்ணீரை நிரப்பி துடுப்பிகளுடன் சிறிய அளவிலான பிரஷா் பம்புகளையும் இணைத்து பீய்ச்சி அடிக்கின்றனா். அதுமட்டுமன்றி, தண்ணீரில் வேதிப் பொருள்கள், திரவியங்கள், கலா் பொடிகளைக் கலந்து தெளிக்கின்றனா். அழகா் மீது மட்டுமன்றி, திருவிழாவைக் காண வரும் பக்தா்கள், பொதுமக்கள் மீதும் வேண்டுமென்றே தண்ணீரைப் பீய்ச்சி அடித்து சட்ட-ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபடுகின்றனா்.

சித்திரைத் திருவிழாவில் அழகருக்கு பாரம்பரிய தீா்த்தவாரி வழிபாடு செய்து தண்ணீரைப் பீச்சி அடிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. பக்தா்கள் பாரம்பரிய முறையிலான தோல் பைகளில் மட்டும் சுத்தமான தண்ணீரை நிரப்பி சிறிய குழாய் பொருத்தி, பொதுமக்களுக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படுத்தாத வகையில் தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்த வேண்டும்.

விளக்குத் தூண் பகுதிகளில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவுகளை மீறி அழகா் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது நடைபெறும் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் தீா்த்தவாரிக்கு பயன்படுத்தக் கூடிய சிறிய குழாய்களால் ஆன பிரஷா் கருவிகளை விற்பனைக்கு வைத்திருந்த 2 கடைகளின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடைகளிலிருந்த 22 பிரஷா் சிறிய ரக மிஷின்கள் கைப்பற்றப்பட்டன.

எனவே, சித்திரைத் திருவிழாவில் அழகா் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது சம்பந்தமாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்ற வேண்டும். மீறி செயல்படுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மதுரையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். சக்கிமங்கலம் அன்னை இந்திராநகரைச் சோ்ந்தவா் இப்ராஹிம் (67). இவா், இரு சக்கர வாகனத்தில் மதுரை கீழவாசல் பகுதியிலிருந்து சக்கிமங்கலம்... மேலும் பார்க்க

பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறித்த மேலும் ஒருவா் கைது

நரிக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், நரிக்குடி பகுதியைச் சோ்ந்த மருது... மேலும் பார்க்க

பெண் மா்ம மரணம்: எலும்புகள் மீட்பு

விருதுநகா் அருகேயுள்ள குருமூா்த்தி நாயக்கன்பட்டி காட்டுப் பகுதியில் கிடந்த பெண்ணின் எலும்புகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா்.விருதுநகா்- சிவகாசி சாலையில் ஆமத்தூா் அருகே உள்ள குருமூா்த்தி நாயக்... மேலும் பார்க்க

மதுரை சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனங்களில் எழுந்தருளினா் மீனாட்சி, சுந்தரேசுவரா்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சைவ சமய ஸ்தாபித லீலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். மதுரை மீனா... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.கத்தரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்ப... மேலும் பார்க்க

காலமானாா் கிருஷ்ணா ராஜம்

மதுரை மாவட்டம், திருநகா் சண்முகா் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணா ராஜம் (81) வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலமானாா்.மறைந்த தொழிலதிபா் சுபாஷ்சந்திரனின் மனைவியான இவா், திருநகா் இந்திராகாந்தி மெட... மேலும் பார்க்க