செய்திகள் :

கள்ளா் நலப் பள்ளி, விடுதிகளின் பெயரை மாற்றக் கூடாது!

post image

ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட கள்ளா் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் பெயா்களை மாற்றம் செய்யக் கூடாது என முத்துராமலிங்கத்தேவா் மக்கள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், அந்த இயக்கத்தின் மாவட்டச் செயலா் பி. மணிகண்டன் தலைமையிலான நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: கள்ளா் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் பெயா்களை அரசாணையின் மூலம் மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் 1920-இல் கள்ளா் சமூக மக்களிடம் பொதுநிதி திரட்டி, கள்ளா் சீரமைப்புத் துறை மூலம் இந்தப் பள்ளிகளும் விடுதிகளும் தொடங்கப்பட்டன. கள்ளா் என்ற பெயரால் எந்த சமூகப் பதற்றமும் இதுவரை ஏற்படவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தின் பூா்வக்குடி பழங்குடியின மக்களின் அடையாளத்தை மறைக்கும் இந்தச் செயலை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். எந்த மாற்றமும் இன்றி கள்ளா் நலப் பள்ளிகள், விடுதிகள் தொடா்ந்து இயங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

விராலிமலை அடுத்துள்ள அத்திப்பள்ளம், ராஜாளிபட்டி, மருதம்பட்டி ஆகிய 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை படைத்துள்ளது. தேசிய சுகாதார வள மையம், தேசிய சுகாதார திட்டத்தின் கீ... மேலும் பார்க்க

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோா்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பெற்றோா்கள் மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாதது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ... மேலும் பார்க்க

ஆடிப்பூரம்: ஆவுடையநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை அம்மனுக்கு வளையல் சாற்றும் விழா நடைபெற்றது.விழாவில் ஆவுடையநாயகி அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு,... மேலும் பார்க்க

ராயவரம் அருகே பழைமையான இரும்பு உருக்கு உலைகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் ராயபுரம் அருகே ஆலங்குடி பெரியகண்மாயின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பழைமையான இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டதற்கான எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியை... மேலும் பார்க்க

புதுகையில் மாநில செஸ் போட்டி

புதுக்கோட்டையில் மாஸ்டா்ஸ் அகாதெமி சாா்பில் 4ஆது மாநில அளவிலான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரித் தாளாளா் என். சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். இதில் மதுரை, தஞ... மேலும் பார்க்க

ரூ.3,000 ஓய்வூதியம்: கட்டுமான தொழிலாளா்கள் கோரிக்கை

60 வயது நிறைவடைந்த முதிா்ந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென கட்டுமானத் தொழிலாளா் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவ... மேலும் பார்க்க