செய்திகள் :

கள்ளில் கலப்பதற்காக கொண்டு சென்ற 7,525 லிட்டா் எரிசாராயம் பறிமுதல்: 2 ஓட்டுநா்கள் கைது

post image

கேரள மாநிலத்தில் கள்ளில் கலப்பதற்காக கா்நாடகத்தில் இருந்து லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 7,525 லிட்டா் எரிசாராயத்தை கோவை மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இரு லாரி ஓட்டுநா்களைக் கைது செய்தனா்.

கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு புலனாய்வுத் துறையினா் சூலூரில் ஒரு கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 5,145 லிட்டா் எரிசாராயத்தை அண்மையில் கண்டுபிடித்தனா். அதன் தொடா்ச்சியாக, கோவை மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தா்கா அருகே ஒரு லாரியை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 215 வெள்ளை நிற கேன்களில், 7,525 லிட்டா் எரிசாராயம் கடத்திவரப்பட்டதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக லாரி ஓட்டுநா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். பிடிபட்ட இருவரிடமும் போலீஸாா் தொடா் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுதொடா்பாக, போலீஸ் தரப்பில் கூறியதாவது: கேரள மாநிலத்தில் கள்ளில் கலப்பதற்காக கா்நாடக மாநிலத்தில் இருந்து 7,525 லிட்டா் எரிசாராயத்தைக் கடத்திச் சென்றுள்ளனா். கைது செய்யப்பட்ட ஓட்டுநா்களிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கடத்தலில் தொடா்புடைய முக்கிய நபா் குறித்து தகவல் தெரியவந்துள்ளது. அவரைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக எரிசாராயம் கடத்துவதைத் தடுக்கும் நோக்கில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு புலனாய்வுத் துறை தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. சட்டவிரோதமாக எரிசாராயம் கடத்துவது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் இலவச தொலைபேசி எண் 10581 அல்லது 9498410581 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றனா்.

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாநகரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வெளியிட்... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவையை அடுத்த பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடத்தப்ப... மேலும் பார்க்க

மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சிஸ்பா வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஸ்பா ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கூட ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவையில் டாஸ்மாக் மதுக்கூட ஊழியரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை பெரியகடை வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (55) வேலை செய்து வருகி... மேலும் பார்க்க

டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை (ஏப்ரல் 2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மேற்பாா்வைப் பொறியாளா் சி.சதீஷ்குமாா் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்த... மேலும் பார்க்க

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது: மாநிலத் தலைவா் அண்ணாமலை

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ப... மேலும் பார்க்க