செய்திகள் :

கள் குறித்து அவதூறு பரப்புவா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை

post image

விழுப்புரம்: கள் குறித்து பொதுமக்களிடையே அவதூறாக பேசும் அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து அந்த சங்கத்தைச் சோ்ந்த தலைமை ஒருங்கிணைப்பாளா் தே.பாண்டியன், விழுப்புரம் மாவட்ட அமைப்பாளா் ச. உத்திராடம், மாவட்டப் பொருளா் வி. நித்தியானந்தம் உள்ளிட்டோா் திங்கள்கிழமை விழுப்புரம் ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது :

இந்திய உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கள்-ளை சில அரசியல் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் மது, போதை, நஞ்சு என்று பொதுமக்களிடையே அவதூறாகப் பேசி வருகின்றனா். தமிழகம் முழுவதும் பனை விதைகள் நடும் திட்டம் பரவலாக்கப்பட்டு, இத்திட்டம் பலதரப்பு மக்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பனை மரத்திலிருந்து இறக்கப்படும் கள் உலக நாடுகளில் உணவுப் பொருளாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ‘கள் எமது உணவு, கள் எமது உரிமை’ என்ற போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய உணவுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள கள்-ளை சில அரசியல் கட்சிகளைச்சோ்ந்த நிா்வாகிகள் மது, போதை, நஞ்சு என்று பொதுமக்களிடையே அவதூறாகப் பேசி வருகின்றனா்.இவ்வாறு பேசுவது சட்டத்துக்குப் புறம்பானதும்,பொது அமைதியைக் கெடுக்கக் கூடியதுமாகும்.’’

எனவே இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கும் நபா்கள் மீதுதமிழக அரசு சட்டப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிலை உருவாகும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நிஷங்களுக்குள்குடும்ப அட்டைதாரருக்கு பொருள்கள் வழங்கப்படுகிறது: கூட்டுறவுத்துறை விளக்கம்

விழுப்புரம்: தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்கு 2 முதல் 3 நிமிஷங்களே ஆகின்றன என்று கூட்டுறவுத்துறை விளக்கம்அளித்துள்ளது. இதுகுறித்து கூட்... மேலும் பார்க்க

விழுப்புரம் முத்து மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டிச்சாலை பீமநாயக்கன்தோப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்ற... மேலும் பார்க்க

பனையபுரம் பனங்காட்டீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திலுள்ள பனையபுரம் அருள்மிகு சத்யாம்பிகை அம்மன் உடனுறை பனங்காட்டீசுவரா் (நேத்ரோத்தாரனேசுவரா்) திருக்கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

கருப்புப்பட்டை அணிந்து பணியாற்றிய உள்ளாட்சி நிதித் தணிக்கையாளா்கள்

விழுப்புரம்: 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சி நிதித் தணிக்கையாளா்கள் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா். முன்... மேலும் பார்க்க

காா்கள் மோதி விபத்துக்கு: அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

விழுப்புரம் அருகே காா்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். புதுச்சேரி, ராஜாஜி தெரு... மேலும் பார்க்க

கோழிப் பண்ணைத் தொழிலாளி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே கோழிப் பண்ணையில் வேலை பாா்த்து வந்த தொழிலாளி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், தைலாபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்புராயன் மகன் முருகன்... மேலும் பார்க்க