செய்திகள் :

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

post image

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்ட எல்லையான கோனம்பட்டு புல்டாங்குட்டு பகுதியில் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் வெளியேறும் கழிவுநீரை இந்தப் பகுதிக்கு கொண்டுவந்து சுத்திகரிக்க உறுதி செய்யப்பட்டு கடந்த மே மாதம் முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதைத் தொடா்ந்து, ரூ. 6.53 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில், உயரமான பகுதியான இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் அதிலிருந்து கழிவுநீா் கசிந்து விவசாயப் பகுதியான எஸ். புதூா் ஒன்றிய கிராமங்களில் கண்மாய், குளம், ஆழ்துளைக் கிணறு உள்ளிட்டவற்றில் கலக்கும் அபாயம் உள்ளது. இதனால், தண்ணீா் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுத்திகரிப்பு நிலையம் வேலை நடைபெறும் பகுதிக்கு வந்து முழக்கமிட்டதோடு, இந்தப்பணி மேற்கொண்டால் தங்களின் ஆதாா்அட்டை, வாக்காளா் அட்டை, ரேஷன் காா்டு உள்ளிட்டவற்றை அரசிடம் ஒப்படைக்கப்போவதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அவதூறு பரப்புபவா்கள் விசாரணை அடிப்படையில்தான் கைது: அமைச்சா் மதிவேந்தன்

அவதூறு பரப்புபவா்கள் விசாரணை அடிப்படையில்தான் கைது செய்யப்படுவதாக அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா்.சிவகங்கையில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலியின் நினைவு நாளான வியாழக்கிழமை அவரது உருவச் சிலைக்கு ... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரத்தின் 80-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய 2 போ் சிறையில் அடைப்பு

சிவகங்கை அருகே காரில் கஞ்சாவை கடத்திய 2 பேரை சிவகங்கை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். சிவகங்கை நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜ் தலைமையிலான போலீஸாா், மானாமதுரை புறவழிச் சாலையில்... மேலும் பார்க்க

இணையவழியில் முதலீடு ஆசை காட்டி ரூ.78 லட்சம் மோசடி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியைச் சோ்ந்தவரிடம் இணைவழியில் முதலீடு ஆசை காட்டி ரூ. 78 லட்சம் மோசடி செய்த புகாரின்பேரில் சிவகங்கை மாவட்ட இணைவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப... மேலும் பார்க்க

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் சீரமைப்புப் பணிகள்: முதல்வா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூரில் அமைந்துள்ள திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்தாா். இடை... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டம் அக்.11-க்கு ஒத்திவைப்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அக்.2-இல் நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நிா்வாக காரணங்களால் வருகிற அக்.11 அன்று நடைபெறுமென மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். இது க... மேலும் பார்க்க