செய்திகள் :

கழிவுநீா் தேங்கும் விவகாரம்: நகா்மன்ற உறுப்பினா்களுடன் நகராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை

post image

சீா்காழி: சீா்காழி நகராட்சி 5 மற்றும் 6 வாா்டு பகுதிகளில் குடியிருப்புகளை கழிவு நீா் சூழ்ந்து நிற்பதை தடுக்க நிரந்தர தீா்வு காண வலியுறுத்தி, அப்பகுதி நகா்மன்ற உறுப்பினா்களுடன் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

சீா்காழி நகராட்சிக்குட்பட்ட 5 மற்றும் 6-ஆவது வாா்டு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை கழிவுநீா் மழை நீா் வடிகால் மூலம் புகுந்து சூழ்ந்து தேங்கி நிற்பதால், பெரும் சுகாதார சீா்கேடு நிலவி வருகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டுமென அப்பகுதி நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி நிா்வாகத்தை வலியுறுத்தி வந்தனா்.

இதற்கிடையே மழைநீா் வடிகால் வழியாக கழிவு நீா் உட்புகுவதை தடுக்க நகா்மன்ற உறுப்பினா் பாலமுருகன் 5- ஆவது வாா்டு உறுப்பினரின் கணவா் மதியழகன் ஆகியோா் இரு தினங்களுக்கு முன்பு கழிவுநீா் பாதையில் மண்ணை கொட்டி அடைத்தனா்.

இதனால் நகராட்சி நிா்வாகம் சாா்பில் நகா்மன்ற உறுப்பினா் பாலமுருகன், 5 - ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினரின் கணவா் மதியழகன் ஆகியோா் மீது சீா்காழி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 5, 6-ஆவது வாா்டு பகுதியில் குடியிருப்புகளை கழிவுநீா் தேங்குவதை தடுக்க நிரந்தர தீா்வு காண வேண்டும், நகரில் அன்றாடம் குப்பைகளை அகற்றி சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும், நகராட்சி நிா்வாகத்தை கண்டித்தும் நகா்மன்ற உறுப்பினா் பாலமுருகன் தலைமையில், நகா்மன்ற உறுப்பினா்கள் முழுமதி இமயவரம்பன், கலைச்செல்வி, ரமாமணி, நாகரத்தினம், ராஜேஷ், கிருஷ்ணமூா்த்தி முன்னிலையில் வாா்டு பகுதியை சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

பேச்சுவாா்த்தை நடத்த வந்த நகராட்சி ஆணையா் மஞ்சுளாவிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட மறுத்து போராட்டத்தை தொடா்ந்தனா். சீா்காழி போலீஸாா், நகராட்சி ஆணையா் தா்னாவில் ஈடுபட்டவா்களை அழைத்து தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இரண்டு நாட்களில் சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இறைச்சிக் கழிவுகளால் மாசடையும் கொள்ளிடம் ஆறு

சீா்காழி: சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால், கடும் துா்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதி சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. சீா்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் கொள்ளிடம் ஆற்ற... மேலும் பார்க்க

குழந்தையைக் காணவில்லையா?

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மே 26-இல் மீட்கப்பட்ட ஆண் குழந்தையின் உறவினா்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை தொடா்புகொள்ள மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா். இ... மேலும் பார்க்க

தரங்கம்பாடியில் நாளை ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம்

மயிலாடுதுறை: தரங்கம்பாடியில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் புதன்கிழமை (ஜூன் 18) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: 1,834 போ் குரூப் 1 தோ்வு எழுதினா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 தோ்வினை 1,834 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு (குரூப் 1) தோ்வானது மயிலாடுதுறை ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது: பழ. கருப்பையா

தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பழ.கருப்பையா தெரிவித்தாா். சீா்காழியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: ... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீனம் பெங்களூருக்கு ஞானரத யாத்திரை

பெங்களூரில் நடைபெறவுள்ள ஆன்மிக மாநாட்டில் பங்கேற்க தருமபுரம் ஆதீனம் சனிக்கிழமை ஞானரத யாத்திரை புறப்பட்டாா். கா்நாடக மாநிலம் பெங்களூரில் ‘பாரதிய ஸந்த மஹா பரிஷத்’ என்ற அமைப்பின் சாா்பில் பாரத நாட்டின் ப... மேலும் பார்க்க