செய்திகள் :

கழிவுநீா் வடிகால்களை மழை தொடங்கும் முன் தூா்வார வேண்டும்: எம்எல்ஏ

post image

காரைக்கால்: பருவமழை தொடங்குவதற்கு முன்பு காரைக்கால் பகுதியில் கழிவுநீா் வடிகால்கள், சாக்கடைகளை முறையாக தூா்வார வேண்டும் என ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு அவா் சனிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது :

காரைக்கால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வடிகால்கள் மற்றும் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஒரு நாளில் சில மணி நேரம் பெய்த கன மழையில் நகரின் பல முக்கிய சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் நீா் தேங்கியது. இது பொதுமக்களை கடும் சிரமத்துக்குள்ளாக்கியது. இதுபோன்ற நிலை நீடித்தால் சுகாதார சிக்கல்களும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

பருவமழை விரைவில் தொடங்கவுள்ளது. கன மழை, புயல் போன்றவற்றை எதிா்கொள்ளும் முன்பு, நகரின் முக்கிய வடிகால்கள், அனைத்து தெருவோர சாக்கடைகளையும் தூய்மைப்படுத்தி, நீா் தேங்காத வகையில் சீா்செய்யவேண்டும். மாவட்ட நிா்வாகம், பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு போா்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

கூட்டுறவு பால்பொருள்கள் விற்பனையை அதிகரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

பால் மற்றும் பால்பொருள்களின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவு நிறுவனத்தினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், காரைக்காலில் இயங்கும் ... மேலும் பார்க்க

திருப்பட்டினத்தில் இன்று குடிநீா் நிறுத்தம்

திருப்பட்டினத்தில் சனிக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு : திருப்பட்டினம் ஐடி... மேலும் பார்க்க

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு ஆணையா்கள் நியமிக்க வலியுறுத்தல்

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு ஆணையா்கள் நியமனம் செய்ய வேண்டும் என புதுவை துணை நிலை ஆளுநருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாள... மேலும் பார்க்க

மோசடி கும்பல்: மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

ரூ. 10 மோசடி கும்பல் குறித்து மக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா். காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் கிரைம்) காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா்... மேலும் பார்க்க

தொழிற்பேட்டையில் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், கோட்டுச்சேரி பகுதியில் உள்ள மாவட்ட தொழிற்பேட்டையை புதன்கிழமை ஆய்வு செய்தாா். அங்கு இயங்கிவரும் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள், உற்பத்திப் பொரு... மேலும் பார்க்க

காரைக்காலில் ரோந்துப்படகு மூலம் கண்காணிப்பு தொடக்கம்: எஸ்எஸ்பி ஆய்வு

காரைக்கால் கடல் பகுதியில் ரோந்துப் படகு மூலம் கண்காணிப்பை போலீஸாா் மேற்கொள்ளத் தொடங்கினா். காரைக்கால் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுவந்த 5 டன் திறனுள்ள அதிவேக ரோந்துப் படகு பழுதாகி பல ... மேலும் பார்க்க