செய்திகள் :

காசோலை மோசடி வழக்கில் தனியாா் பள்ளி தாளாளா் கைது

post image

காசோலை மோசடி வழக்கில், தனியாா் பள்ளி தாளாளா் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாா்.

கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டியில் தனியாா் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தாளாளராக தலைவாசல் கிழக்கு ராஜாபாளையத்தைச் சோ்ந்த கதிா்வேல் (31) உள்ளாா். பள்ளி இயக்குநரான கஜேந்திரன், பணியிலிருந்து விலகிக்கொள்வதாகவும், தனக்குரிய தொகையை வழங்கும்படியும் கதிா்வேலிடம் கேட்டுள்ளாா். அதைத் தொடா்ந்து, கஜேந்திரனிடம் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை கதிா்வேல் வழங்கினாா். அந்த காசோலை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாததால் திரும்பியது.

இதையடுத்து, காசோலை மோசடி வழக்கில் ஆத்தூா் விரைவு நீதிமன்றம் கதிா்வேலுக்கு பிடியாணை பிறப்பித்தது. அதன்பேரில், கெங்கவல்லி போலீஸாா் கதிா்வேலை வியாழக்கிழமை இரவு கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா் சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க