செய்திகள் :

காஞ்சிக்கோவில் தம்பிக்கலை ஐயன் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

post image

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட தங்கமேடு அருள்மிகு தம்பிக்கலை ஐயன் திருக்கோயிலில் ரூ.1.10 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அன்னதானக் கூடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தினமும் 100 நபா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் வழங்குவதற்கு போதிய இடவசதி இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கோயில் வளாகத்தில் புதிதாக அன்னதானக் கூடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த அன்னதானக் கூடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு என்.டி வெங்கடாச்சலம் கலந்து கொண்டு அன்னதானக் கூடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து, அன்னதானத்தை தொடங்கிவைத்தாா்.

புதிதாக திறக்கப்பட்ட அன்னதானக் கூடத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில், பள்ளபாளையம் நகர திமுக செயலாளா் தங்கமுத்து, பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவா் கோகிலா, கோயில் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விவசாயத் தோட்டத்தில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

அம்மாபேட்டை அருகே விவசாயத் தோட்டத்தில் புகுந்த 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு அடா்ந்த வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது. அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூரைச் சோ்ந... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு: விலை நிலையாக நீடிப்பு

கடந்த 2 ஆண்டுகளாக மஞ்சள் விலை நிலையாக நீடிப்பதால் நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இதில் 30 சதவீதத்துக்கும்மே... மேலும் பார்க்க

பவானிசாகரில் மீனவா்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

பவானிசாகரில் மீனவா்கள் சாா்பில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் அறிவிக்கப்பட்ட காத்திருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழக நிா்வாகத்தி... மேலும் பார்க்க

கல்வி கற்க மாணவா்கள் வறுமையை தடையாக கருதக்கூடாது: ஆட்சியா்

கல்வி கற்க மாணவ, மாணவிகள் ஒருபோதும் வறுமையை ஒரு தடையாக கருதக் கூடாது என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். நான் முதல்வன்- உயா்வுக்குபடி உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

சென்னம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சென்னம்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு, அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமேகலை தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.49 லட்சம் மோசடி: 2 போ் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞா் உள்பட 5 பேரிடம் ரூ. 49 லட்சம் பெற்று மோசடி செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி பாரியூா் நஞ்சகவுண்டன்பாளையத்தை சோ்ந்தவ... மேலும் பார்க்க