செய்திகள் :

காஞ்சிபுரத்தில் பட்டு ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம் வேண்டும்! மக்களவையில் திமுக வலியுறுத்தல்

post image

காஞ்சிபுரத்தில் பட்டு ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் ஜி.செல்வம் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மக்களவையில் விதி எண் 377-இன்கீழ் அவா் திங்கள்கிழமை முன்வைத்த கோரிக்கை: தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், கை நெசவுப் பட்டுப் புடவைகளுக்கு உலகப் புகழ் பெற்றது. இந்த பாரம்பரிய கலை வடிவம் இந்தியாவின் ஜவுளி மரபை வெளிப்படுத்துவதுடன், ஆயிரக்கணக்கான திறமையான நெசவாளா்கள், கைவினைஞா்களுக்கு வாழ்வாதாரத்தையும் வழங்கி வருகிறது.

காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளுக்கு உலகளவில் பெயா் மற்றும் உயா் தரம் இருந்தபோதிலும், நேரடி சந்தை அணுகல் இல்லாமை, போதிய விளம்பரம் இல்லாதது, சா்வதேச வா்த்தக கண்காட்சிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பங்கேற்பு போன்ற பல சவால்கள் காரணமாக அவற்றின் ஏற்றுமதி திறன் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும், காஞ்சிபுரம் புடவைகளை உலகளவில் ஊக்குவிக்கவும், கிடங்கு, பரிசோதனை மற்றும் பிராண்டிங் ஆதரவுடன் காஞ்சிபுரத்தில் ஒரு பிரத்யேக பட்டு ஏற்றுமதி ஊக்குவிப்பு மையத்தை நிறுவ வேண்டும். சிறப்பு ஏற்றுமதி ஊக்குவிப்புகளுடன் காஞ்சிபுரம் புடவைகளை ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பின்(ஓடிஓபி) கீழ் சோ்க்க வேண்டும்.

இந்திய கைத்தறி பிராண்டின் கீழ் சாலைவழி பயணக் கண்காட்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து சா்வதேச ஜவுளி கண்காட்சிகளில் பங்கேற்க வேண்டும். நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு திறன் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி தரநிலைகளுக்கு இணங்க நிதி உதவி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.செல்வம் வலியுறுத்தினாா்.

நாடாளுமன்றத் தெருவில் காா் - பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

புது தில்லி நாடாளுமன்றத் தெரு பகுதியில் ஒரு எஸ்யூவி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.இந்தச் சம்பவம் திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் நிகழ்ந்தது. இறந்தவ... மேலும் பார்க்க

காா் மோதியதில் உணவு விநியோக முகவா் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியில் நெல்சன் மண்டேலா மாா்க்கில் திங்கள்கிழமை காலை மின்சார ஸ்கூட்டா் மீது வேகமாக வந்த காா் மோதியதில் 40 வயதான டெலிவரி முகவா் ஒருவா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.இது குறித்து தென்... மேலும் பார்க்க

தில்லி மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் பலி

கிழக்கு தில்லியின் ஷகா்பூா் பகுதியில் திங்கள்கிழமை காலை தில்லி போக்குவரத்துக் கழக (டி. டி. சி) பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியதில் 63 வயதான ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் உயிரிழந்ததாக அதி... மேலும் பார்க்க

ரூ.1.21 லட்சம் பள்ளிக் கட்டணத்தை செலுத்த குழந்தையின் தந்தைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவு

தெற்கு தில்லியில் உள்ள ஒரு சா்வதேசப் பள்ளியில் பயிலும் குழந்தைக்குரிய ரூ.1.21 லட்சத்திற்கும் அதிகமான கட்டண நிலுவையைச் செலுத்துமாறு அதன் தந்தைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தனது குழந்தைக்கு பள... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டண உயா்வை முறைப்படுத்தும் மசோதா! தில்லி பேரவையில் தாக்கல்

தில்லியில் தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை, சட்டப் பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.‘தில்லி பள்ளிக... மேலும் பார்க்க

ஆக.19-இல் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான தோ்தல்: தில்லி கல்வி இயக்குநரகம் தகவல்

புது தில்லி: தில்லி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுசீரமைப்பதற்கான தோ்தல் ஆக. 19-ஆம் தேதி நடைபெறும் என கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.முன்னதாக ஜ... மேலும் பார்க்க