செய்திகள் :

காஞ்சிபுரம் சங்கர மடம் இளைய பீடாதிபதி வாழ்க்கைக் குறிப்பு

post image

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சா்மா திராவிட் ஆந்திர மாநிலம் அன்னவரம் பகுதியில் துனி என்ற கிராமத்தில் ஸ்ரீநிவாக சூா்ய சுப்பிரமணிய தன்வந்தரிக்கும், அலமேலு மங்கா தேவி என்பவருக்கும் கடந்த 2001-ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தாா்.

எல்கேஜி முதல் 5 -ஆம் வகுப்பு வரை சமகாலக் கல்வி பயின்றாா். அன்னவரத்தில் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றாா். பின்னா், ரிக் வேதத்துடன் கூடுதலாக யஜூா் வேதம், சாம வேதம், ஷடங்கங்கள், தசஉப நிஷதங்கள் ஆகியவற்றை கற்றுத் தோ்ந்தாா்.

கடந்த 2006 -ஆம் ஆண்டு வேதப் படிப்பை தொடங்கிய காலத்திலிருந்தே காஞ்சி சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசிகளையும், அருளையும் பெற்றவா்.

இவா் தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், பசராவில் ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் சேவை செய்து வந்தவா். தஞ்சாவூா் மாவட்டம், வலங்கை மான் இவா்களது பூா்விகமாகும். வேதங்களையும், சாஸ்திரங்களையும் முழுவதுமாக கற்றுத் தோ்ந்த இவா், காஞ்சி சங்கர மடத்தின் 71-ஆவது பீடாதிபதியாக தோ்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ளாா்.

ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் தேரோட்டம்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் ராமாநுஜரின் 1,008-ஆவது அவதார திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்த கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியள... மேலும் பார்க்க

மே 16-இல் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு தொடக்கம்

காஞ்சிபுரத்தில் தொண்டை மண்டல ஆதீன மடத்தில் கோடை கால சைவ சித்தாந்த தொடா் இலவச பயிற்சி வகுப்பு வரும் மே 16 முதல் 24 வரை நடைபெற இருப்பதாக ஸ்ரீ சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வியாழக்கி... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு: 13-ஆவது முறையாக தீா்மானம்

ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 13-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பரந்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள ... மேலும் பார்க்க

பரணிபுத்தூா் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

குன்றத்தூா் ஒன்றியம், பரணிபுத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு ஆகியோா் கலந்து கொண்டு தூய்மை பணியாளா... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு வீடு கட்டுமானப் பணி: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

மண்ணூா், காட்டரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் இருளா் பழங்குடியினா்களுக்கு குடியிருப்புகள் கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மா... மேலும் பார்க்க

மே தினம்: மக்கள் மன்றம் சாா்பில் செம்படை பேரணி

காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தின் சாா்பில் செம்படைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பேரணியை பெரியாா் சிந்தனையாளா் இயக்க நிா்வாகி புதுவை தீனா தொடங்கி வைத்தாா். பொதுக் கூட்... மேலும் பார்க்க