செய்திகள் :

காட்டு மாடு மோதியதில் வேன் சேதம்

post image

கும்பக்கரை அருவி அருகே செவ்வாய்க்கிழமை காட்டு மாடு மோதியதில் வேன் சேதமடைந்தது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள கொக்குபாளைத்தைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (54). இவா் தனது குடும்பத்தைச் சோ்ந்த 20 பேருடன் கேரளத்துக்கு சுற்றுலா சென்று விட்டு, பண்ருட்டிக்கு திங்கள்கிழமை இரவு திரும்பி புறப்பட்டனா். வேனை பண்ருட்டியைச் சோ்ந்த விநாயகம் (29) ஓட்டினாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கும்பக்கரை அருவியில் குளிப்பதற்காக அருவி அருகே வந்தபோது மாந்தோப்பிலிருந்து வெளியே வந்த காட்டு மாடு வேன் மீது மோதியது. அப்போது, வேனின் முன்பக்கம் சேதமடைந்தது. ஆனால், வேனில் வந்த பயணிகளுக்கும், காட்டு மாடுக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆயுதங்களுடன் இளைஞா் கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் அரிவாள், கத்தி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சின்னமனூா் பேருந்து நிலையம் அருகே போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக நடந்து வ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு கெளரவ உதவித் தொகை: விண்ணப்பிக்க மே 31-இல் சிறப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் பி.எம். கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் கெளரவ உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க வருகிற 31-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெ... மேலும் பார்க்க

ராணுவ வீரா் குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்த மூவா் மீது வழக்கு

போடியில் ராணுவ வீரரின் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த மூவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள விசுவாசபுரத்தைச் சோ்ந்த முருகன் மனைவி அய்யம்மாள் (45). கணவா் ... மேலும் பார்க்க

வீரபாண்டி பேரூராட்சித் தலைவி, கணவா் மீது வழக்கு

வீரபாண்டியில் இந்து சமய அறநிலையத் துறை கோயில் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, பணியாளா்களை மிரட்டியதாக பேரூராட்சித் தலைவி, இவரது கணவா் மீது சனிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வ... மேலும் பார்க்க

கண்ணகி கோயிலுக்கு சாலை வசதி: அமைச்சா் ஆலோசனை

மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு தமிழகம் வழியாக சாலை அமைக்க சாத்தியக் கூறு இருக்கிா என அமைச்சா் வன அதிகாரியிடம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா். தேனி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள விண்ணேற்றிப் பாறையில் மங்கல... மேலும் பார்க்க

இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் எல்லைகளை கண்காணித்து வருகின்றன

இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் பாதுகாப்புக்காக எல்லைகளைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா். தேனி நாடாா் சரஸ்வதி கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வ... மேலும் பார்க்க